தந்தையும் மகளும்/27

விக்கிமூலம் இலிருந்து


27அப்பா! சில இடங்களில் மலைகள் எரிந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! சில இடங்களில் எரிமலைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவைகள் எல்லாம் அடுப்பில் விறகு எரிவதுபோல் எரிபவை அல்ல. அவ்வாறு எரியுமானால் விறகு எரிந்து இல்லாமற் போய் விடுவதுபோல அந்த மலைகளும் இல்லாமல் போய்விட வேண்டும் அல்லவா? அவைகள் அவ்விதம் எரிந்து இல்லாமல் போய்விடுவதில்லை.

அம்மா! நாம் பூமி முழுவதும் கட்டியாக இருப்பதாக எண்ணுகிறோமே, அது தவறு. தரையிலிருந்து, கீழே 40 மைல் தூரம்தான் கட்டியான மண், அதற்கப்புறம் உள்ளே மண்ணும் கல்லும் உஷ்ணத்தால் ஒரே குழம்புதான், அங்குள்ள உஷ்ணம் ஐயாயிரம் டிகிரி இருக்கும். அந்த உஷ்ணம் மேலே தரைக்கு வந்து காற்றல் கலந்து மறைந்து போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் குழம்பின் உஷ்ணம் குறைந்து கொண்டே வருகிறது. உஷ்ணம் குறைந்தால் பொருள்கள் சுருங்கும் என்பதை நீ அறிவாய். அப்படிச் சுருங்கும் பொழுது தரை மெல்லியதாக உள்ள இடத்தில் வெடிப்பு உண்டாகும். அந்த வெடிப்பு வழியாக உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு வெளியே வந்து விடுகிறது. அப்படி வெளியே வரும் மண்குழம்பு குளிர்ந்து குவிந்து மலைகளாக ஆகி விடுகின்றன.

அலற்றின் சிகரங்கள் ஆழமான பள்ளங்கள் உடையனவாக இருக்கும். அந்தப் பள்ளங்களில் கல்லும் மண்ணும் இளகிக் குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில் திடீரென்று உள்ளேயுள்ள உஷ்ணம் அதிகமாய்விடும். அப்பொழுது குழம்பு மேலே கிளம்பிப் பொங்கி வழிந்து அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களை எல்லாம் அழித்துவிடும்.

சுமாத்திராத் தீவின் அருகிலுள்ள காராக்கடேரவா எரிமலை 1882-ம் ஆண்டில் திடீரென்று கல்லையும் மண்ணையும் கக்க ஆரம்பித்துவிட்டது. அந்தக் கல்லும் மண்ணும் 1600 மைல் தூரம் வரை போய் விழுந்தனவாம். அதன் முழக்கம் 20 மைல் தூரம் வரை கேட்டதாம்.

இவ்வாறு உள்ளே குழம்பாகக் கொதித்துக் கொண்டிருப்பதைக் கொண்டுதான் எரிமலைகள் என்று கூறுகிறார்கள். அத்தகைய மலைகள் ஆயிரம் உள, அவற்றுள் முன்னுற்றைம்பது இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/27&oldid=1538102" இலிருந்து மீள்விக்கப்பட்டது