நன்னூல் எழுத்ததிகாரம்
பவணந்தி முனிவர்[தொகு]
==நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
1. எழுத்தியல்[தொகு]
நூற்பா: 56
- (அருகக் கடவுள் வணக்கம்)
- பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
- நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. (01)
நூற்பா: 57
- (எழுத்திலக்கணத்தின் 12 பகுதிகள்)
- எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
- முதலீ றிடைநிலை போலி யென்றா
- பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (02)
1. எண்[தொகு]
நூற்பா: 58
- (எழுத்தும் அதன்வகையும்)
- மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
- எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (03)
நூற்பா: 59
- (முதலெழுத்து)
- உயிரு முடம்புமா முப்பது முதலே. (04)
நூற்பா: 60
- (சார்பெழுத்து)
- உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
- பஃகிய இஉ ஐஒள மஃகான்
- தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். (05)
நூற்பா: 61
- (சார்பெழுத்தின் விரி)
- உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
- எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை8
- ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
- உகர மாறா றைகான் மூன்றே
- ஒளகா னொன்றே மஃகான் மூன்றே
- ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
- ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. (06)
2. பெயர்[தொகு]
நூற்பா: 62
- (பெயரின் பொதுஇலக்கணம்)
- இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின. (07)
நூற்பா: 63
- (எழுத்தின்பெயர்)
- அம்முத லீரா றாவி கம்முதன்
- மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். (08)
நூற்பா: 64
- (குறில்)
- அவற்றுள்,
- அஇ உஎ ஒக்குறி லைந்தே. (09)
நூற்பா: 65
- (நெடில்)
- ஆஈ ஊஏஐ ஓஒள நெடில். (10)
நூற்பா: 66
- (சுட்டு)
- அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே. (11)
நூற்பா: 67
- (வினா)
- எயா முதலும் ஆஓ வீற்றும்
- ஏயிரு வழியும் வினாவா கும்மே. (12)
நூற்பா: 68
- (வல்லினம்)
- வல்லினங் கசட தபறவென வாறே. (13)
நூற்பா: 69
- (மெல்லினம்)
- மெல்லினம் ஙஞண நமன வெனவாறே. (14)
நூற்பா: 70
- (இடையினம்)
- இடையினம் யரல வழள வெனவாறே. (15)
நூற்பா: 71
(இனவெழுத்து)
- ஐஒள இஉச் செறிய முதலெழுத்
- திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. (16)
நூற்பா: 72
(இனம் என்றதற்குக் காரணம்)
- தான முயற்சி யளவு பொருள்வடி
- வானவொன் றாதியோர் புடையொப் பினமே. (17)
3. முறை[தொகு]
நூற்பா: 73
- (எழுத்துகளின் வரிசைமுறை)
- சிறப்பினுமினத்தினுஞ் செறிந்தீ்ண்டம்முதல்
- நடத்த றானே முறையா கும்மே. (18)
4. பிறப்பு[தொகு]
நூற்பா: 74
- (பிறப்பின் பொதுவிதி)
- நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
- எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
- மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
- வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. (19)
நூற்பா: 75
- (முதலெழுத்தின் பிறப்பு- இடம்)
- அவ்வழி,
- ஆவி யிடைமை யிடமிட றாகும்
- மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (20)
8
நூற்பா: 76
- (முதலெழுத்தின் பிறப்பு-முயற்சி)
- அவற்றுள்,
- முயற்சியுள் அஆ வங்காப் புடைய. (21)
நூற்பா: 77
- இஈ எஏ ஐயங் காப்போ
- டண்பன் முதனா விளிம்புற வருமே. (22)
நூற்பா: 78
- உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே. (23)
நூற்பா: 79
- கஙவுஞ் சஞவும் டணவும் முதலிடை
- நுனிநா வண்ண முறமுறை வருமே. (24)
நூற்பா: 80
- அண்பல் லடிநா முடியுறத் தநவரும். (25)
நூற்பா: 81
- மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும். (26)
நூற்பா: 82
- அடிநா வடியண முறயத் தோன்றும். (27)
நூற்பா: 83
- அண்ண நுனிநா வருட ரழவரும். (28)
நூற்பா: 84
- அண்பன் முதலு மண்ணமு முறையின்
- நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
- லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். (29)
நூற்பா: 85
- மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (30)
நூற்பா: 86
- அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். (31)
நூற்பா: 87
- (சார்பெழுத்துப் பிறப்பு- இடம், முயற்சி)
- ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
- சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (32)
நூற்பா: 88
- (பிறப்புக்குப் புறனடை)
- எடுத்தல் படுத்த னலித லுழப்பில்
- திரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும். (33)
நூற்பா: 89
- (உயிர்மெய்)
- புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
- ஏனை யுயிரோ டுருவு திரிந்தும்
- உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
- பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய். (34)
நூற்பா: 90
- (முற்றாய்தம்)
- குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
- உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. (35)
நூற்பா: 91
- (உயிரளபெடை)
- இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
- அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (36)
நூற்பா: 92
- (ஒற்றளபெடை)
- ஙஞண நமன வயலள வாய்தம்
- அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
- மிகலே யவற்றின் குறியாம் வேறே. (37)
நூற்பா: 93
- (குற்றியலிகரம்)
- யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
- அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய. (38)
நூற்பா: 94
- (குற்றியலுகரம்)
- நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
- தொடர்மொழி யிறுதி வன்மை யூருகரம்
- அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. (39)
நூற்பா: 95
- (ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள்)
- தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
- நையு மௌவு முதலற் றாகும். (40)
நூற்பா: 96
- (மகரக்குறுக்கம்)
- ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும். (41)
நூற்பா: 97
- (ஆய்தக்குறுக்கம்)
- லளவீற் றியைபினா மாய்த மஃகும். (42)
5. உருவம்[தொகு]
நூற்பா: 98
- தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
- டெய்து மெகர வொகரமெய் புள்ளி. (43)
6. மாத்திரை[தொகு]
நூற்பா: 99
- (எழுத்துக்களின் மாத்திரை)
- மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே
- குறிலோ டையௌக் குறுக்க மொற்றள
- பரையொற் றிஉக் குறுக்க மாய்தங்
- கால்குறண் மஃகா னாய்த மாத்திரை. (44)
நூற்பா: 100
- (மாத்திரை என்றால் என்ன)
- இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை. (45)
நூற்பா: 101
- (மாத்திரைக்குப் புறனடை)
- ஆவியு மொற்று மளவிறந்திசைத்துலும்
- மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். (46)
7. முதனிலை[தொகு]
நூற்பா: 102
- (மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்)
- பன்னீ ருயிருங் கசதந பமவய
- ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். (47)
நூற்பா: 103
- (வகரம்)
- உஊ ஒஓ வலவொடு வம்முதல். (48)
நூற்பா: 104
- (யகரம்)
- அஆ உஊ ஓஒள யம்முதல். (49)
நூற்பா: 105
- (ஞகரம்)
- அஆ எஒவ்வோ டாகு ஞம்முதல். (50)
நூற்பா: 106
- (ஙகரம்)
- சுட்டியா வெகர வினாவழி யவ்வை
- யொட்டி ஙவ்வு முதலா கும்மே. (51).
8. இறுதிநிலை[தொகு]
நூற்பா: 107
- (மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்)
- ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
- சாயு முகரநா லாறு மீறே. (52)
நூற்பா: 108
- (சிறப்பு விதி)
- குற்றுயி ரளபி னீறா மெகர
- மெய்யொ டேலாதொந் நவ்வொ டாமௌக்
- ககர வகரமோ டாகு மென்ப. (53)
நூற்பா: 109
- (எழுத்தின் முதலும் ஈறும்)
- நின்ற நெறியேயுயிர் மெய்முத லீறே. (54)
9. இடைநிலை[தொகு]
நூற்பா: 110
- (உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம்)
- கசதப வொழித்த வீரேழன் கூட்டம்
- மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரேட்
- டாகுமிவ்விருபான் மயக்கு மொழியிடை
- மேவு முயிர்மெய் மயக்கள வின்றே (55)
நூற்பா: 111
- (வேற்றுநிலைமெய்ம்மயக்கம்-சிறப்புவிதிகள்)
- ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே. (56)
நூற்பா: 112
- ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும் (57)
நூற்பா: 113
- டறமுன் கசப மெய்யுடன் மயங்கும். (58)
நூற்பா: 114
- ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும். (59)
நூற்பா: 115
- மம்முன் பயவ மயங்கு மென்ப. (60)
நூற்பா: 116
- யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும். (61)
நூற்பா: 117
- லளமுன் கசப வயவொன் றும்மே. (62)
நூற்பா: 118
- '(உடனிலை மெய்ம்மயக்கம்- சிறப்புவிதி)
- ரழ வல்லன தம்முற் றாமுட னிலையும். (63)
நூற்பா: 119
- யரழவொற் றின்முன் கசதப ஙஞநம
- ஈரொற்றாம்ரழத் தனிக்குறி லணையா. (64)
நூற்பா: 120
- லளமெய் திரிந்த ணனமுன் மகாரம்
- நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே. (65)
நூற்பா: 121
- தம்பெயர் மொழியின் முதலு மாயக்கமும்
- இம்முறை மாறி யியலு மென்ப. (66)
10. போலி[தொகு]
நூற்பா: 122
(மொழியிறுதிப் போலி)
- மகர விறுதி அஃறிணைப் பெயரின்
- னகரமோ டுறழா நடப்பன வுளவே. (67)
நூற்பா: 123
- (மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி)
- அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். (68)
நூற்பா: 124
- (மொழியிடைப்போலி
- ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
- ஞஃகா னுறழு மென்மரு முளரே. (69)
நூற்பா: 125
- (சந்தியக்கரம்
- அம்மு னிகரம் யகர மென்றிவை
- யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
- டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. (70)
நூற்பா: 126
- (எழுத்தின் சாரியைகள்)
- மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
- ஐயௌக் கானு மிருமைக் குறிலிவ்
- விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. (71)
நூற்பா: 127
- (இவ்வியலின் புறனடை நூற்பா)
- மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே. (72)
எழுத்ததிகாரம் எழுத்தியல் முற்றிற்று[தொகு]
- பார்க்க:
- நன்னூல் பாயிரவிய
ல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
- நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
- [[]] :[[]]:[[]]:[[]]:[[]] :[[]]