பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

________________

56 குலே தான் இவ்வளவு ஆபத்து. இதை நீ உன் வீட்டிலே வளரச் செய்தே, ஒரே வருஷத்திலே அப்பனை முழுங்கி விடும்; பிறகு நீ, உன் மூத்தவன், இப்படி 'காவு வாங்கிக் கொண்டே இருக்கும். அதனாலே இதை வேறெயாருக்கா வது தத்து கொடுத்துவிடு. உன்பிள்ளை என்கிற எண்ணமே கூடாது. நியும் "இதுவும்' ஒரே கூரையிலே இருந்தாலே ஆபத்துத்தான் ஒரு ஐந்து நிமிஷத்துக்கு மேலே, நீ இதைப் பார்த்தாக்கூட ஆபத்து ஏற்படும், இது பேய்க்கிப் பொறந் தது என்று சொன்னான். முணாமாசம் என தங்கச்சி தூக் கிட்டுப் போனா. அதிலே இருந்து அங்கேயே அவன் இருந்துகிட்டான். ஆனதாலே தான் டாக்டரய்யா, நான் அவனோட போய் இருக்க முடியறதில்லை. இதை அவனுக்குச் சொல்லவும் கூடாதுன்னு பூசாரி சொல்லியிருககிறான். மகன என்கிற பாசத்தாலோ, இந்தத தள்ளாத வயதிலே நிம்மதியா இருக்கலாமே என்ற எண்ணத்தாலேயே, நரன் அவனோட போய் இருக்கிறதுன்னா, என்னாலே, ஊருக்கே நாசம வந்துடுமே, அந்தப்பாவத்தைச் சுமக்கச் சொல்றிங் களா. அவனும் குழந்தை குட்டிகளோட இப்ப சுகமா இருக்கிறால் - நானும் அவனும் ஒரே கூறையின் கீழே இருக்க ஆரம்பிச்சா. அந்தப் பேய் அவன் குழந்தை குட்டி களையும் காவு கேட்டுவிடும். அதனாலேதான், 'அக்கரை போயிருக்கிற என மகன வருகிற வரையிலே என்ன வேதனையானாலும் அனுபவிச்சு கிட்டு இருக்கிறதுன்னு ஏற் பட்டுப் போச்சு" என்று கூறினாள். டாக்டருக்கு வந்த ஆததிரத்துக்கு அளவே இல்லை. 'எங்கே அந்தப் பூசாரி? என்று கோபமாகக் கேட்டார் - "அவன் செத்து வருஷம் ஆறு ஆவுதே" என்றாள் கிழவி. என்ன செய்வான் பாதிரியப்பன், பேயாவது பூதமா வது, சாபமாவது என்று சொன்னால், கிழவியால் நமப முடி யுமா! பல கலை வல்லவர்களே அந்த மயக்கத்திலிருந்து விடு