பக்கம்:அமர வேதனை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிவிறிடும்

ஊற்றுச் சிரிப்பு

சிறு குருவிகள் போலே

ஆட்டமும் குதிப்பும்

ஒட்டமும் துள்ளலும்

கொண்டு,

மலரின் ஒளியாய்

இசையின் ஒலியாய்

திகழும் குழந்தைகள்

இயல்பை

பெரியவர்

இரவல் பெற்றிடின்

நன்றேயாகும்

என்று

என்னுளம் கருதும்.

1970
வல்லிக்கண்ணன்
29
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/31&oldid=1181358" இருந்து மீள்விக்கப்பட்டது