18
காட்டிக் காண்பவனும் அவனே. (எல்லாவற்றிற்கும் ஆதாரமாக) அறியப்படுகின்ற மெய்ப்பொருளும் அவனே. விரிந்தொளிதரும் சுடர்களாகிய ஞாயிறு திங்களாகவும் நிலமுதல் ஆகாயம் வரையுள்ள ஐம்பெரும் பூதங்களாகவும் உள்ள அவ்வெல்லாப் பொருள் களுமாய் வீரவி நிற்பவனும் அவ்விறைவனே. எ-று.
“அத்துவிதமாவது, பேதப்பொருள் இரண்டும் தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்த விசேடம்...... உயிர் ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறிதலையின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாதென்பது ‘தொண்டனேன் நினையுமா நினையே’ ‘விரும்புமா விரும்பே’....... என்றிவ்வாறு முத்தி நிலைபற்றியோதிய திருவாக்குக்களானும் அறிக. இவ்வியல்பு நோக்கி யன்றே ‘அறிவானுந்தானே அறிவிப்பான்’ தானே என்றோதிய அம்மை, ‘அறிவாயறிகின்றான் தானே’ எனவும் ஓதியதூஉம் என்க. முன் ‘அறிதல்’ அறிவித்திற்பொருட்டெனவும், பின் ‘அறிவாயறிதல்’ விடயத்தில் அழுந்துவித்தற்பொருட்டெனவும் கொள்க. (சிவ ஞான போதச் சிற்றுரை- 11ம் சூத்திரம்) எனச் சிவஞான முனிவர் இத் திருப் பாடலுக்குக் கூறிய விளக்கம் ஆழ்ந்துணரத்தக்கதாகும்.
அவனே யிருசுடர்தீ யாகாச மாவான்
அவனே புவிபுனல்காற் றுவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.
(21)
இ-ள். (முன்னைத் திருப்பாடலிற்கூறிய இயல் பினனாகிய) அவ்விறைவனே ஞாயிறு திங்கள் என்னும் இரு சுடர்களாகவும் தீயாகவும் ஆகாயமாகவும்