மனிதர்கள் அறிஞர்களாக வாழ வேண்டும் என்று தூண்ட வேண்டும் என்கிற எனது இலட்சியமே, பல நூல்களாகப் பிறந்திருக்கின்றன. சிறந்திருக்கின்றன. இந்த நூலும் அதன் வழிதான் வந்திருக்கிறது.
பலர் என்னைப் பாராட்டுகிற நேரத்தில், என் வெற்றி பெற்ற இலட்சியத்தை எண்ணி வியந்து மகிழ்ந்திருக்கிறேன். என்னை வழிநடத்தும் இறைவனுக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்திருக்கிறேன்.
இந்த நூல் ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. உடல் நலம் காப்பதில் உண்மையாகவே பொதுமக்கள் உளமார ஈடுபடுகிறார்கள் என்பதை அறிகிற போது இந்த நூலின் அருமையும், பெருமையும், தேவையின் தெளிவும் நன்கு புலனாகிறது.
படித்துப் பயன் பெற்ற, பயன் பெறுகிற அனைத்து நல்லிதயங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.
இந்நூலை அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்ஸ் மற்றும் மேலாளர் திரு. ஆர். ஆதாம் சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்.
எனது நூல்களை ஆதரித்து உதவுவோர் அனைவருக்கும் என் இனிய நன்றி.
ஞானமலர் இல்லம்
அன்புடன்
சென்னை - 17
டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா
ஆசிரியர் அவர்கள் எழுதிய ஐந்தாம் பதிப்பின் முன்னுரை அப்படியே வெளியிடப்படுகிறது