பதிப்புரை
விளையாட்டுத்துறை நூல்களை தமிழ் இலக்கிய உணர்வோடு எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள்.
மழலையர் பள்ளி மாணவர்கள் முதல் ஆய்வறிஞர், பட்ட மாணவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு பெற்றவர்.
அவரே ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதை பலமுறை தான் படித்த பள்ளி, கல்லூரிகளில் நிரூபித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரனாக, ஆசிரியராக, பேராசிரியராக தான் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு தான், விளையாட்டுத் துறை நூல்களை அதிக எண்ணிக்கையில் எழுத அவருக்குக் கிடைத்த வாய்ப்பு.
ஒரே துறையில் அதிக எண்ணிக்கையில் தமிழ் நூல்களை எழுதிய பெருமை டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களையே சாரும். அவரது நூல்களை தொடர்ந்து வெளியிட வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர். நவராஜ் செல்லையா அவர்களின் நல்லாசியுடன் அவரது நூல்களை வெளியிட மேலும் தொடருவோம்.