“முள்ளினை முள்ளைக் கொண்டே
முறியாமல் களைத லொன்று,
கள்ளனைக் கள்ளற் கொண்டே
கண்டுகைப் பற்ற லொன்று;
தள்ளுவோ ரில்லை யேனும்,
தக்கநற் செயல்க ளுக்குத்
தெள்ளியோ ரிவ்வு பாயம்
தேர்ந்திடார்” என்றான், நந்தன்.
'கலகல' எனந கைத்துக்
கடிந்திது சொல்வான்: “நந்தா!
பலபல நூல்கள் கற்ற
பண்டிதன் கெளடில் யன்தான்
'நிலவுல காள்வோர் செல்வம்
நெறியிது சேர்க்க' என்றான்.
நலமல என்று நீயும்
நாடாது மறுக்கின் றாயால்.
கறுப்பிது சிவப்பி தென்று
கண்கொண்டு காணா முன்னே
மறுப்பது செய்தாய், நந்தா!
மதிக்கிறேன் உன்னை; ஆனால்.
பொறுப்பதற் கில்லை; இன்ரே
பொருந்திடும் நல்ல யுக்தி
வெறுப்பது விளைவ தற்குள்
வேறு நீ கூறாப்,” என்றே.
24