பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

கஞ்சிகொண்டு வாரதுக்கு இந்நேரமா
ஏபுள்ளை வீராயி உனைக்
காத்திருந்து பார்ப்பதுக்கு இந்நேரமா ?
சோத்துக்கு உப்புப்போட்டுக் கொண்டாந்தியா
ஏபுள்ளே வீராயி-உன்றன்
சொக்குப் பேச்சுக் கேட்பதுக்கு இந்நேரமா ?
ஊறுகாய் ரண்டு வச்சுக்
கொண்டாந்தியா
ஏபுள்ளை வீராயி- உன்னை
உத்துப் பார்த்துப் பேச்சுக் கேட்க இந்நேரமா ?


[சோத்துக்கு-சோற்றுக்கு. உத்துப் பார்த்து-உற்றுப் பர்ர்த்து.]