பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

காற்றில் வந்த கவிதை


தொடங்குகிறாள். அவள் முடிக்கும்போது ஐலசா ஐலசா என்று மற்றவர்கள் கூவுகிறார்கள். வேலையிலே புதிய உற்சாகம் பிறக்கிறது. பாட்டுத் தந்த உற்சாகம் அது:

சாலையிலே-ஏலேலோ
தகரக்கள்ளி-ஐலசா
சாஞ்ச தெல்லாம்-ஏலேலோ
திருகு கள்ளி-ஐலசா
திருகு கள்ளி-ஏலேலோ
பூவெடுக்க-ஐலசா
திருடு ரானே-ஏலேலோ
சின்னப் பையன்-ஐலசா
ஆறு வண்டி-ஏலேலோ
நூறு சக்கரம்-ஐலசா
நம்ம தச்சன்-ஏலேலோ
செய்த வண்டி-ஐலசா
மாட்டு வண்டி-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மாய மாக-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மானத் திலே-ஏலேலோ
சாலை போட்டு-ஐலசா
மாதுளம் பூ-ஏலேலோ
பாவி ருக்கு-ஐலசா
அங்கிருந்து-ஏலேலோ
பேசுரானே-ஐலசா
ஆகாயத்தில்-ஏலேலோ
பேசுரானே-ஐலசா

ஏலேலோ ஐலசாப் பாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றின் இசை எளிமையானதாக இருந்தாலும்