பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

காற்றில் வந்த கவிதை


அரசமரத்தடியே-கிருஷ்ணன்
அம்புவிளையாட
அரசியைக் கண்டதுமே-கிருஷ்ணன்
அம்பை விடுத்தாராம்
(உரியிலே)

இவ்வாறு கும்மியும் பாடலும் நெடு நேரம் நடக்கும். பிறகு பட்சணக் கூடைகள் காலியாகும். கூடியிருந்தவர்களுக்கெல்லாம் நிறையக் கிடைக்கும்.

இவ்வாறு சிறுமிகளின் பூப் பொங்கல் இன்பமாக முடியும்.