பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

193


திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்(று)
அறிந்தேன் வாழி காவேரி!

சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்
சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்!
ஊர் திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மட அன்னம்! சேரல் நடை ஒவ்வாய்!

முதலிய பாடல்கள் மாதவியிடம் ஊடல் தோன்றுவதற்குக் காரணமாயின. மாதவி, கோவலன் அயற்பெண் ஒருத்தியிடம் கொண்ட காதற் குறிப்பில் பாடுகிறான் என்ற எண்ணத்தில் உள்ளம் ஊடினாள்.

மாதவி தன் ஊடலை முகக்குறிப்பில், ஒதுங்கி நிற்றல் முதலிய வழிகளில் புலப்படுத்தியிருந்தால் கோவலன் மாதவியின் ஊடற்குறிப்பை உணர்ந்திருப்பான். மாதவியின் ஊடலையும் மாற்ற முயற்சி செய்திருப்பான்.

ஆனால், மாதவி தன் ஊடலை வெளிப்படையாக உணர்த்தாது கோவலனைப் போலவே குறிப்புப் பொருள் வைத்துப் பாடினாள்.

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை யதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம் நின்கணவன்