பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கும் எளிதான வழி என் வசமாயிற்றோ ? என்ற இத்தகைய எண்ணங்கள் என்மனதில் குடி கொண்டன. முப்பது வருஷங்களின் அத்தாட்சி அக்காலத்தில் நான் எதையும் ரூபிக்கத் திறனற்றவனாயிருந்தேன். இப்பொழுது எனக்கு இப்பாகத்தில் 30-வருஷத்திய அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இக்கிரமத்தை நான் பல தடவைகளில் பரீக்ஷை செய்து பார்த்திருக்கிறேன். இதனால் நான் என் வியாதியைக் குணப்படுத்திக் கொண்டது மல்லாமல் இதரர்களையும் குணப்படுத்தி யிருக்கிறேன். இப்பொழுது சரீரத்தின் எப் பாகத்திற்காகிலும் அதிகமாக இரத்தமானது சென்று அதன் காரியங்களை எப்பொழுதும் போல நடத்தும் படிச் செய்ய என்னால் முடியும். இத்தனை நாள் பிரயோகத்தாலும், பரிசீலனையாலும் நான் ஒரு சரியான மார்க்கத்தைக் கண்டறிந்திருக்கிறேன். அது மிகவும் எளிதானதே. சரீரத்தின் கண் வியாதியால் வருந்தும் பாகங்களுக்கு சுத்தமாயும், ஆரோக்கியமாயுமுள்ள இரத்தத்தைத் தேவையான மட்டும் பரவும் படிச் செய்தால் வியாதியானது நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இரத்த வோட்டமானது நின்று விடுவதனால் அகால மரணம் ஏற்படுகின்றது. என்னுடைய வழியினால் மனிதனானவன் தன் இரத்த வோட்டத்தை ஸ்வாதீனஞ் செய்து கொண்டு தன்னிஷ்டப் பிரகாரம் சரீரத்தின் எப்பாகத்திற்காகிலும் அதிக இரத்தத்தை யனுப்பலாம் என்பதைத் தெளிவாக எல்லாரும் அறியும் படிச்செய்ய வேண்டு மென்பதே என்னுடைய முக்கிய உத்தேசம். ஆரோக்கியத்தை எளிதில் அடையக்கூடிய சிறந்த உபாயங்கள் வேறு ஒன் றுங் கிடையாது. என்னுடைய உபாயங்களைப் பின்பற்றி வெவ்வேறு ஸ்வரங்களைத் தகுந்த வழியில் உச்சரித்து வந்தால் இரத்த வோட்டமானது ஸ்வாதீனத்திலிருந்து கொண்டு மனித உடம்பை யும் ஸ்வாதீனத்திற்குக்கொண்டுவரும். வீண்தோற்றமோ அல்லது உண்மையோ. இந்த ஸ்வாதீனமானது உண்மையானதென்று என்னுடைய 30 வருஷத்திய சொந்த அனுபவத்தினால் நான் கூறுகின்றேன். அவ்வளவு எதற்கு. நீங்களே பிரத்யட்சமாகச் செய்து அறிந்து கொள்ளுங்கள். மேல் எழுந்து நின்று மூக்கினால் உங்களுடைய சுவாஸ கோசங்களிலிருக்கும் காற்றை யெல்லாம் கூடுமான வரைக்கும் வெளியே விட்டுக்கொண்டு 8, 10 தரம் பூர்த்தியாக சுவாஸத்தை