228
செயலும் செயல் திறனும்
முதலியவை நோக்கிச் செய்யப் பெறும் செயல்கள் அடங்கும்.
- 4. வாழ்வியலைப் பெரிதாகக் கருதாமல், முழுவதுமாக ஒரு கொள்கை நோக்கிய செயல்கள். ஈகச் தியாகச் செயல்கள்:
இவை தந்நலம் கருதாமல் பொதுநலம் கருதி ஈகவுணர்வால் மூன்றாம் பகுதியில் கூறப்பெற்ற செயல்களைச் செய்வதாகும்.
இந்நான்கு வகைச் செயல்களுக்குமே துணையாளர்களும், பணியாளர்களும் தேவை. ஆனால் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் உரிய துணையாளர்களையும் பணியாளர் களையும் தேறுவதுதான் மிகவும் கடினமானது. ஆனால் அதனைச் செயலுக்கு முன் நிற்பவர்கள் திறம்படச் செய்துதான் ஆகவேண்டும். இல்லெனில் செயல் செய்வது கடினம் சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (6.64) என்னும் திருக்குறட்பாவில் செயலருமை நன்கு கூறப்பெற்றிருப்பதை நன்றாக மனத்தில் இறுதிக் கொள்ளுதல் வேண்டும். சரியான துணையாளர்களும் பணியாளர்களும் அமையாத விடத்து, அச்செயல் இன்னும் பல மடங்கு கடுமையாகப் போய்விடும் என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் திருவள்ளுவப் பேராசானும்,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
(517)
என்றும்
செய்வானை நாடி வினைநாடி காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்.
(516)
என்றும்
வினைக்குரிமை நாடிய பின்னை அவனை
அதற்குரியன் ஆகச் செயல்
(518)
என்றும் கூறி, வினைமுடிக்கத் தகுதியுடையவனையும் செய்யத் தகுந்தவனையும், வினையைத் தன்னுடையது என்று உரிமையுடையவனாகக் கருதுபவனையும் துணையாளாகவும் பணியாளாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
இனி, மேற்கூறிய நான்குவகைச் செயற்பாடுகளுள், முதல்வகைச் செயற்பாடுகளுக்கு அத்துணைத் திறமையுடைய ஆள்கள் தேவையில்லை. அஃதாவது ஒரளவு துணையாளராகவும் பணியாளர்களாகவும் இருந்தால் போதும்.