பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

229



இரண்டாவது வகைச் செயற்பாடுகளுக்குத் துணையாக வரவேண்டியவர்கள் முதலாம் நிலையுடையவர்களை விடக் கூரிய அறிவுடையவர்களாகவும் சீரிய வினைத்திறம் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டுவது இன்றியமையாதது.

இனி, மூன்றாவது நான்காவது வகைச் செயற்பாடுகளுக்கோ கூரிய திறப்பாடுகளுடனும், உயரிய பண்புகள், பட்டறிவுகள், செயலறிவுகள், நடுநிலையுணர்வு, அவாவின்மை, பொருள் நசையின்மை, தந்நல மறுப்பு, ஈகவுணர்வு முதலியவை கட்டாயம் தேவையன்றோ? எனவே அத்தகைய உணர்வுடையவர்களையே நாம் தேர்ந்தெடுத்துத் துணையாளர் களாகவும் பணியாளர்களாகவும் அமர்த்துதல் வேண்டும்.

துணையாளர்களும் பணியாளர்களும் செப்பமற்றவர் களாக இருப்பின் வினைத்தொய்வு ஏற்படும். அதனால் சிறு சிறு அளவிலோ, பேரளவிலோ, ஒவ்வொரு முறையிலுமோ, ஒட்டுமொத்தமாகவோ இழப்புகள் நேரும் என்பதையும் சில நேரங்களில் இழப்புகளும் ஏதங்களும் கூட நேரும் என்பதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, துணையாளர்களுள் உறவினர்கள் முதலானவர்கள் நல்ல உறவினர்கள் நல்ல துணையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொது நல உணர்வுள்ளவர்களாக அமையாதவிடத்து, வினைக்குத் தொல்லையாகவும் தடையாகவுமே அமைந்துவிடுவர். அவர்கள் நம்பிக்கை யுடையவர்களாக இருத்தல் மிக மிக இன்றியமையாதது.

உறவினர்கள் நல்ல உணர்வுடையவர்களாகக் கிடைக்காவிடில், நல்ல நண்பர்கள் துணையாக அமையலாம். நல்ல நண்பர்களைத் தேறுவது மிக்வும் கடினம். பெரும்பாலும் நல்ல நண்பர்கள் எனத் தகுதியுடையவர்கள், ஒருவரோ இருவரோதாம் அமைய முடியும். அன்பர்கள் எனப்படுபவர்கள் வேறு; நண்பர்கள் எனப்படுபவர்கள் வேறு. அன்பர்கள் எல்லாரும் நண்பர்கள் ஆகிவிட மாட்டார்கள். நல்ல நண்பர் என்பவர் மனைவிக்கு உள்ள உணர்வுடையவர்களாகவே இருப்பதும் இன்றியமையாதது.

நல்ல நட்புக்குரியவனே நல்ல நண்பனையும் பெற முடியும். நட்பு இருபுறத்தும் ஒன்றுபோல் இருக்கும் உணர்வுடையது. திருக்குறளில் நட்பைப்பற்றி நிறையக் கருத்துகள் கூறப்பெறுகின்றன. ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் ஒன்றிரண்டு அதிகாரங்களில், பத்து, இருபது. குறட்பாக்களாக எடுத்துக் கூறிய திருவள்ளுவப் பேராசான், நட்புணர்வைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல் பழைமை, தீநட்பு,