பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

உவமைக்கவிஞர் சுரதா


இளமைக் காலத்திலிருந்தே எழிலரசன், எழிலன் என்னும் புனை பெயர்களில் எழுதி வந்தார். வானம்பாடி பத்திரிகையிலும் ஆசிரியர் எழிலன் என்றே காணப்படுகிறது.

தி. வ. மெய்கண்டார்
நூல் : அமரர் கலைாமணி கவிஞர் வானம்பாடி
வாழ்க்கைக் குறிப்பு (1987)
பாரதி - 'கல்வி' அறிவுள்ளவர்

பாரதியாருக்கு அவர் தந்தையார் வைத்த பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். தாம் இளம் பருவத்தினராய்ப் இருந்த போதே இவர் கல்வி அறிவுள்ளவராகக் காணப்பட்டமையினால், விருதை சிவஞான யோகியார் என்னும் அறிஞர், கல்வி அறிவுள்ளவர் என்னும் பொருள்படும் பாரதி என்னும் பட்டத்தை இவருக்கு, எட்டயபுரம் சமஸ்தானத்திலே, குரு குகதாசப் பிள்ளை வீட்டிலே, கற்றோர் புகழும் அவையிலே, அளித்தார்.

நூல் : தமிழ்ப் பெருமக்கள் பக்கம் - 68, ஏப்ரல், 1949 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்
நூலாசிரியர் : எஸ். எஸ். அருணகிரிநாதர்.
பூதக் கண்ணாடி - உருப்பெருக்கிக் கண்ணாடி

வானத்தில் - கொசு முதற்கொண்டு பெரிய கழுகுவரையுமாகப் பலவகைப்பட்ட பிராணிகள் பறவைகளாகக் காணப்படுகின்றன. இவைகள் இறக்கைகளைக் கால்களாகக் கொண்டு காற்றென்னும் பாதையில் நடந்தும், பறவைகளாக வான வெளியில் சஞ்சரிக்கின்றன. இவைகள் நம் முகக் கண்கொண்டு கண்டபிராணிகளாகும். உருப்பெருக்கி பூதக் கண்ணாடியும் கொண்டு கண்டால் இன்னும் சிறிய உயிர்ப்பொருள்களையும் காணலாம். நூல் கண் கொண்டு கண்டால் இன்னும் பெரிய உயிர்ப் பொருள்களையும், சிறியவைகளையும் காணலாம்.

நூல் : மனித இயல்பு (1949) பக்கம் -21
நூலாசிரியர் : திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர்
(பரமாத்வைத சித்தாந்த ஆசிரியர்)