220
தமிழ்ப் பழமொழிகள்
சாமி சக்தி பூசாரிக்குத் தெரியாதா?
சாமி மலையேறிப் போச்சு.
சாமியார் நாய் சிஷ்யனுக்குப் பயப்படுமா?
சாமியாருக்குச் சாமியார் வேண்டும்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான். 10615
- (இடம் கொடுக்கமாட்டான்.)
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்பது போல.
சாமைப் பயிரும் விளைந்தால் தெரியும்; சக்கிலியப் பெண்ணும் சமைந்தால் தெரியும்.
சாமைப் பயிரைக் கதிரில் பார்.
சாய்ந்த பக்கம் சாய்வது.
சாய்ந்த மரத்தில் ஓடி ஏறலாம். 10620
சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம்.
சாயந்தரத்தில் கல்யாணம்; பிடி தாம்பூலம்.
சார்வு இல்லாதவனுக்கு நிலை இல்லை.
சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்து விடுவது போல.
சாராயத்தைத் தினம் குடித்தால் காராளனும் கடைமகன் ஆவான். 10625
சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேள்.
- (கேட்பான்.)
சாராயம் குடித்த நாய்போல.
சாரை கொழுத்தால் மாட்டுக்காரனிடம் போகும்.
சாரை தின்னும் காட்டுக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு.
- (ஊருக்குப் போனால் தடுக்கண்டம் நடுமுறி.)
சாரையும் சர்ப்பமும் இழைவது போல. 10630
சால்போல் வயிறும் சப்பரக் கட்டைக் காலும்.
சால்போல வயிறு: ஊசி போலத் தொண்டை.
சால் வயிறு நிறைந்தாலும் சவலை வயிறு நிறையாது.
சாலாய் வளைந்தால் எனன? சட்டியாய் வளைந்தால் என்ன?
சாலாய் வைத்தாலும் சரி; சட்டியாய் வைத்தாலும் சரி. 10635
சாலை வழியே போகிற சனியனைச் சாயங்காலம் வீட்டுக்கு வா என்றானாம்.
சாலோடு அகப்பை தட்டாமல் போகுமா?
சாலோடு தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தீர்க்கும்.
- (தண்ணீரால் தாகம் தெளியும்.)