இயல் ஒன்று
இரட்டைச் செய்யுட்கள்
1.இந்த இயலில் ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்
திரங்களால் விளக்கப் பெற்றிருத்தலால், இதற்கு இரட்டைச் செய்யுட்கள்’ என்று பெயர்.)
H.
2
மனிதரை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை: சிந்தனைகளா லேயே அது ஆக்கப் படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும், வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். (1)
மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளா லேயே அது ஆக்கப்படுகின்றறு. மனிதன் நல்லெண் ணத்துடன் பேசினாலும் செயல்புரிந்தாலும், நிழல் தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். . (2)
ன்னை நிந்தித்தான், என்னை அடித்தான், என்னை வென்றான். என்னைக் கொள்ளையிட் டான் -இத்தகைய எண்ணங்களை உடையாரிடம்
துவேஷம் நீங்காது நிலைத்திருக்கும். (3)
என்னை நிந்தித்தான், என்னை அடித்தான், ன் னை வென்றான், என்ன்ைக் கொள்ளையிட் டான் -இத்தகைய எண்ணங்கள் இல்லாதாரிடம்
துவேஷம் நில்லாது நீங்கும். (4)