பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

திருக்குறள்


9.செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

பிறர் சொல்லும் குறைபாடுகள் கேட்பதற்குத் தன் காதுகட்கு இனிமையாக இல்லாமல் வெறுக்கத் தக்கனவாக இருந்தாலும், அத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுமையோடு கேட்கும் குணமுடைய அரசனது ஆட்சியின் கீழே இவ்வுலகத்தார் அனைவரும் அடங்கி வாழ்வர்.

செவிகைப்ப-காதுகளால் கேட்கச் சகியாத; கவிகை-குடை, இங்கே ஆட்சியைக் குறிக்கும். 389

10.கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

கொடுக்கும் தன்மையும், கருணையும், நீதி முறையும், குடிமக்களைக் காப்பாற்றும் தன்மையும் ஆகிய இந்தநான்கு குணங்களையும் உடைய அரசன் பிற அரசர்களுக்கெல்லாம் விளக்கொளி போன்று இருந்து பிரகாசிக்கத் தக்கவன்.

அளி-கருணை; செங்கோல்-நீதி நெறியோடு ஆட்சி புரியும் தன்மை; குடியோம்பல்-குடிகளுக்குத் துன்பம் வாராமல் காக்கும் தன்மை; ஒளி-விளக்குப் போன்றவன்; சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் சொல்லலாம். 390

40. கல்வி


1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்பதற்குத் தகுதி வாய்ந்த நூல்களைக் குற்றம் அஜக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற நூல்களில் சொல்லியவாறு நடக்க முயலுதல் வேண்டும்.

கசடு-ஐயமும் மயக்கமும் ஆகிய குற்றங்கள்: அற-நீங்க; கற்பவை -கற்கத் தகுந்த நூல்கள். 391

2.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படும் கணக்கு நூல்களும், எழுத்து என்று சொல்லப்படும் இலக்கண, இலக்கிய நூல்