பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றினம் சேராமை

115


தனக்கு நன்மையைப் புரிவோராய பெரியோர் ஒருவரின் நட்பினை இழத்தல், (வல்லமை வாய்ந்த) பலருடைய பகைமையைத் தேடிக் கொள்ளுவதைவிடப் பத்து மடங்கு அதிகமான தீமையை விளைவிப்ப்து ஆகும்.

பல்லார்-பலர், கணக்கற்றவர்; கைவிடல்-முற்றிலும் ஒழித்து விடுதல். 450

46. சிற்றினம் சேராமை


1.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெருந்தன்மை வாய்ந்த பெரியோர் இழிந்த குணம் வாய்ந்த சிறியோர் கூட்டத்தை நெருங்குதற்கு அஞ்சுவர்; சிறியோர் தம்மைப் போன்ற சிறுமைக் குணம் வாய்ந்தோரைக் கண்ட போதே அவரைத் தம் நெருங்கிய சுற்றத்தவராக எண்ணித் தழுவிக் கொள்வர்.

சிற்றினம்-குணத்தாலும், அறிவாலும், செயலாலும் இழிந்த தன்மை வாய்ந்தவர் கூடியுள்ள கூட்டம்; பெருமை-பெருந்தன்மை வாய்ந்த பெரியோர். 451

2.நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

நீரானது எந்த நிலத்துடன் சேர்கின்றதோ, அந்த நிலத்தின் தன்மையைப் பெற்றுத் தன் இயல்பிலிருந்து முற்றிலும் மாறி விடும். அது போல, மக்களுக்கும் அவர்கள் எந்த இனத்தாருடன் சேர்கின்றனரோ, அந்த இனத்தாரின் தன்மைக்கு ஏற்ற அறிவே ஏற்படும்.

இயல்பு-தன்மை; திரிந்து-மாறி; அற்று-அத்தன்மையது (நிலத்தின் தன்மையது); மாந்தர்-மக்கள். 452

3.மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.

மக்களுக்கு அறிவு அவர்தம் மனம் காரணமாக உண்டாகிறது. ஆனால், 'இவர் இத்தகைய குணம் உடையவர்'