பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடன் அறிதல்

127


10.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

ஒரு கொழிலைச் செய்வதற்கு தகுந்த காலம் அமையாத போது, கொக்கு போல் அமைதியாக இருத்தல் வேண்டும். தகுந்த காலம் வாய்த்த போது, அதன் குத்துப் போல அந்தச் செயவை தவறாது உடனே செய்து முடித்தல் வேண்டும்.

ஒக்க-ஒத்து இருக்க; கூம்பும் பருவம்-ஒடுங்கியிருக்கும் காலம்; கூம்புதல்-ஒடுங்குதல்; சீர்த்த இடம்-செயல் புரிவதற்கு வாய்த்த இடம்; சீர்த்தல்-சமயம் வாய்த்தல். 490

50. இடன் அறிதல்


1.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பகைவரை முற்றுகை செய்தற்கு ஏற்ற இடத்தைக் கண்டு கொள்வதற்கு முன், அந்தப் பகைவரை வெல்ல நினைக்கும் எந்தச் செயலையும் தொடங்குதல் கூடாது. அச்செயல்களை இகழ்தலும் கூடாது.

எள்ளுதல் - இகழ்தல். இது பகைவரை இகழ்தல். பகைவரை அழிக்கும் காரணமாகச் செய்யத்தக்க செயல்களை இகழ்தல் ஆகிய இரண்டு செயல்கட்கும் பொருந்தும்; முற்றுதல்-பகைவர் கோட்டை கொத்தளம் முதலியவைகளை வளைத்துக் கொள்ளுதல். 491

2.முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.

பிற துணைகள் சிறிதும் இன்றித் தம் உடல் வலிமை ஒன்றைக் கொண்டே, பகைவரை வெல்லத் தக்க வலிமையுடையவர்க்கும் கோட்டை கொத்தளங்களோடு கூடிய வசதி பலவித நன்மைகளையும் கொடுக்கும்.

முரண்-மாறுபாடு, பகைமை; மொய்ம்பு-வலிமை; அஃதாவது மிக்க வலிமை; அரண்-கோட்டை கொத்தளங்கள்; ஆக்கம்-வசதி; பல-இங்கே பலவித நன்மை 492