பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிந்து வினையாடல்

133


நேர்ந்த இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்க வல்லவனே குறித்த ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.

வாரி-வழி; வளம்-வெல்வம்; உற்றவை நேர்ந்த இடையூறுகள். 512

3.அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும், ஆசையில்லாமையும் ஆகிய நான்கு குணங்களையும் சிறப்பாக உடையவனையே ஒரு செயலைச் செய்யத் தெரிந்தெடுத்தல் வேண்டும்.

மேற்சொன்ன நான்கு குணங்களும் நிரம்பப் பெற்றவனிடத்தில் ஒரு வேலையைத் தர நிச்சயிக்க வேண்டும் என்பது கருத்து. 513

4.எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒரு வேலையை மேற்கொண்டு செய்யும் போது, அவ்வேலை வேறுபாடு காரணமாகக் குணம் மாறுதல் அடையும் மக்கள் உலகத்திலே பலர் உண்டு.

எல்லா வகையாலும் ஆராய்ந்து நிச்சயித்து விட்டோம் என்று எண்ணி ஏமாறலாகாது; பதவி உயர்வால் மக்கள் மாறுதல் கூடும் என்பது கருத்து. 514

5.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

வேலை செய்யும் வழிகளை அறிந்து அவ்வேலையால் வரும் இடையூறுகளைத் தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை, அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என்று எண்ணி ஒரு வேலையைச் செய்யும்படி கட்டளையிடுதல் கூடாது.

வினைதான் சிறந்தான் என்பதற்கு வேலையில் சிறந்தவன் என்றும் பொருள் கூறலாம். வேலையில் சிறந்தவன் என்பதை மட்டுமே கருதி, மற்றவற்றை ஆராயாமல் ஒருவனை ஏவலாகாது. 515