பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

திருக்குறள்



இந்த உலகம் தாட்சண்யத்துக்குக் கட்டுபட்டது. என்பது கருத்து. 571

2.கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

கண்ணோட்டத்தினால்தான் இந்த உலக ஒழுக்கம் நடைபெற்று வருகின்றது. கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவர் இவ்வுலகத்தில் இருத்தல், இந்தப் பூமிக்கே ஒரு பெரிய பாரம்.

உலகியல்-உலக ஒழுக்கம், உலக ஒழுங்கு; உண்மை-இருத்தல், உயிர் வாழ்ந்திருத்தல். 572

3.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பாட்டோடு பொருந்துதல் இல்லா விட்டால், இசையினால் என்ன பயன்? அதுபோலக் கண்ணோட்டம் இல்லாதபோது கண்ணாலும் பயன் இல்லை.

பண்-இசை; இயைபு-பொருந்துதல்; இல்லாத கண்-இல்லாத போது. 573

4.உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

வேண்டிய அளவு தாட்சண்யம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போலத் தோற்றம் அளித்தல் அல்லாமல், வேறு என்ன நன்மையைச் செய்யும்? அவற்றால் எவ்வித தன்மையும் இல்லை.

கண்ணோட்டம் இல்லாத கண்கள் இருந்தும் பயன் இல்லை. 574

5.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

ஒருவருடைய கண்ணுக்கு ஆபரணம் போன்று அழகினைத் தருவது கண்ணோட்டம் என்னும் குணமே ஆகும். அஃது இல்லையானால், அது கண் அன்று புண் என்றே கருதப்படும்.

அணிகலம்-ஆபரணம். 575