பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணோட்டம்

151



6.மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.

கண்ணைப் பெற்றிருந்தும், அதற்குரிய தாட்சண்யம் என்னும் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோடு பொருந்தியிருக்கின்ற மரத்துக்குச் சமம் ஆவர்.

மண்ணின் மீது பொருந்தியிருக்கின்ற மரத்துக்கும் கணுக்கள் என்ற கண்கள் இருக்கின்றன. அந்தக் கணுக்கள் மரத்தின் கண்கள் போன்று காட்சி அளிப்பினும், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இல்லாதவை. ஆதலின், இந்த உவமை மிகவும் பொருத்தம் ஆகும்.

'மண்ணோடு இயைந்த மரத்தனையர்' என்பதற்குச் சுவரில் எழுதிய கற்பக மரம் போன்றவர் என்றும், கண்ணம், மரம் முதலியவைகளால் செய்யப் பெற்ற கண்களையுடைய மரப்பாவை போன்றவர் என்றும் பொருள் கூறுவார் 576

7.கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவரே ஆவர்; ஏன் என்றால், கண்ணுடையவர் கண்ணோட்டம் இல்லாமல் இரார்.

கண்களுக்கும் கண்ணோட்டத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதனால் விளக்கப்படுகிறது. 577

8.கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

தம் செயலில் வழுவாமல், கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவருக்கு இவ்வுலகம் உரியதாகின்றது.

நடுநிலைமையோடு கண்ணோட்டம் செய்தல் வேண்டும். தாட்சண்யம் காட்டுதலில் நண்பன், அயலான் முதலிய வேறுபாடு கூடாது. கண்ணோட்டம் கருதித் தாம் மேற்கொண்ட செயலிலும் தவறுதல் கூடாது. இத்தகையோர் நெடுங்காலம் உரிமையோடு வாழத் தகுதியுடையவர் ஆவர். 578

9.ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.