பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒற்றாடல்

153



2.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

எல்லோரிடத்திலும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் ஒற்றர் மூலமாக எப்போதும் விரைந்து அறிந்து கொள்ளுதல் அரசனுக்கு உரிய தொழிலாகும்.

எஞ்ஞான்றும்-எப்போதும்; ஞான்று-பொழுது; வல்லறிதல்-விரைவில் அறிந்து கொள்ளுதல்; எல்லாரிடத்திலும் என்பது சுற்றத்தார், பகைவர், அயலார், நண்பர் என்னும் நான்கு வகையினரையும் குறிக்கும். 582

3.ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.

ஒற்றன் வாயிலாக நாட்டில் நிகழும் செய்திகளை எல்லாம் மறைவாக இருந்து அறிந்து, அவற்றின் பயனை ஆராய்ந்து உணராத அரசன் வெற்றி பெறத் தக்க வழி யாதும் இல்லை.

ஒற்றினான்-ஒற்றன் வாயிலாக; ஒற்றி-மறைவாகக் கேட்டறிந்து; கொற்றம்-வெற்றி. 583

4.வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

அரச காரியஞ் செய்பவர், அரசனுக்கு நெருங்கிய சுற்றத்தினராய் ஆராய்வோனே ஒற்றன் ஆவான். 584

5.கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பிறர் சந்தேகதேகப்படாத வேடத்தோடு, பிறர் சந்தேகம் கொண்டு பார்க்க நேரினும், அதற்குச் சிறிதும் அஞ்சாது, எத்தகைய சமயத்திலும், தன் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.

கடா அ உருவொடு-இவர் யார் என ஐயுற்று வினவாத வடிவத்தோடு, வேடத்தோடு; கண்ணஞ்சாது-சந்தேகம் கொண்டு பார்க்கும் கண்களுக்குச் சிறிதும் அஞ்சாமல்; உகாஅமை-உமிழாமை, இங்கே சொற்களை வெளியிடாமை என்பது பொருள். 585



தி.-11