பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைமாட்சி

203



தன் கையில் பொருள் வைத்துக் கொண்டு ஒன்றைச் செய்வானுடைய செயல், சமவெளியில் நிகழும் யானைப் போரை ஒருவன் மலையின் மீது இருந்து கொண்டு அச்சமும், வருத்தமும் சிறிதும் இன்றிக் கண்டு இன்புறுதற்குச் சமம் ஆகும்.

தன்கைத்து-தன் கையினிடத்தில்; ஒன்று உண்டாகச் செய்வான்-ஒரு தொகைப் பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்பவன். 758

9.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரியது இல்.

ஒருவன் பொருளைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்; தன் பகைவரின் செருக்கினைக் கெடுக்க வல்ல கூர்மையான ஆயுதம் அதனைப் போல் வேறொன்றும் இல்லை.

பொருளைச் செய்தல்-பொருளைத் தொகுத்து வைத்துக் கொள்ளுதல்; செறுநர்-பகைவர்; செருக்கு-பெருமிதம், அகந்தை; எஃகு-ஆயுத வகை; கூரியது-கூர்மையானது. 759

10.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

நல்ல வழியில் வந்த பொருளை மிகவும் அதிகமாகத் தொகுத்துக் கொண்டவருக்கு மற்றை அறன், இன்பம் ஆகிய இரண்டும் எளிதில் பெறக்கூடிய பொருள்கள் ஆகும்.

ஒண்பொருள்-ஒள்ளிய பொருள். நல்வழியில் தொகுத்த சிறந்த பொருள்; காழ்ப்ப-மிகுதியாக; காழ்த்தல்-முதிர்தல்; எண்பொருள்-எளிய பொருள்கள்; ஏனை என்பது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் பிறவாகிய அறனும் இன்பமும் ஆகும். 760

77. படைமாட்சி


1.உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் பகுதிகளும் நிறைந்ததாய்ப் போரின் கண் நேரத் தக்க