பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நெறிக் காவலர்—முதுபெரும் புலவர்

பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள்

 

உலகப் புலவன் வள்ளுவனின்
        உள்ளம் அறிந்த சிவமுத்துப்
புலவன் இனிய எளியநடை
        பொலியும் இந்த உரை நூலைப்
பலரும் வாங்கி நாடோறும்
        படிப்போம்; சுவைப்போம்; இன்புறுவோம்;
நலமும் வளமும் பெருகிடவே
        நடப்போம் வள்ளுவர் நெறியினிலே.
                                         —தணிகை உலகநாதன்

 

மூவேந்தர் அச்சகம், சென்னை-600 014