பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

திருக்குறள்


3.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

களவின் மூலம் வரும் செல்வம் முதலில் அளவு கடந்து பெருகுவது போல் தோன்றி, முடிவில் முதலிலிருந்த பொருளையும் அழித்துத் தானும் அழியும். 283

4.களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

பிறர் பொருளை அபகரிக்க எண்ணும் எண்ணத்தினால் எழுந்த பேராசை அவ்வெண்ணத்தை நிறைவேற்றச் செயலில் ஈடுபடும் போது நீங்காத துன்பத்தைத் தரும்.

கன்றிய-மிகுந்த;விளைவின்கண்-செயலில் தோன்றும் போது; வீயா-அழியாத;விழுமம்.துன்பம். 284

5.அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

கருணையின் காரணமாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புடையோராயிருக்கும் குணம், பிறர் பொருளைக் கவர எண்ணிப் பொருளுடையவர் ஏமாறி இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போரிடம் தோன்றாது.

பொச்சாப்பு-மறதி, ஏமாறி இருக்கும் தன்மை. 285

6.அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

பிறர் பொருளைக் களவு செய்தலில் மிகுந்த ஆசையுடையவர்கள் நீதி நெறியின்படி அடங்கி நின்று வாழ. மாட்டார்கள்.

அளவு-நீதிநெறி; ஒழுகலாற்றா-வாழ மாட்டார் 286

7.களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

நீதி நெறியில் நின்று வாழக் கூடிய வல்லமை உடையவர்களிடம் திருட்டுத்தனம் என்னும் அறியாமையோடு கூடிய, வல்லமை இல்லை.