பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறன் வலியுறுத்தல்

இ-ள்:- ஒல்லும் வகையால் - நமக்கு இயலும் திறத்தானே, அறவினை ஓவாதே - அறவினையை ஒழியாதே, செல்லும் வாய் எல்லாம் செயல் - செய்யலாம் இடமெல்லாம் செய்க.

இயலும் திறம் - மனம் மொழி மெய்களும் பொருளும், செல்லும் வாய் - அறம் செய்தற்குத் தக்க பல இடங்களும், ஒழியாதே - நாள்தோறும்.

அறம் வலிதென்று அறிந்தவர்கள் அதனை இவ்வாறு செய்க என்று கூறிற்று இது. ௩௨.

ன்றறிவாம் என்னா தறம்செய்க; மற்றது.
பொன்றுங்கால் பொன்றாத் துணை,

இ-ள்:- அன்று அறிவாம் என்னாது அறம்செய்க - பின்பே அறிந்து செய்வோம் என்னாது முன்பே அறத்தைச் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அது சாம் காலத்திலும் சாகாதே நின்று பிறக்கும் இடத்திற்குத் துணையாம்.

இஃது, அறம் செய்யுங்கால் விரைந்து செய்ய வேண்டுமென்றும், அது மறுமைக்கும் துணையா மென்றும் கூறிற்று, ௩௩.

றத்தா றிதுவென வேண்டா; சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

இ-ள்:- அறத்து ஆறு இது எனவேண்டா - அறத்தின்பயன் இத்தன்மைத் தென்று நீங்கள் (கேள்வியால்) அறியவேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிலிகையைக் காவுவானோடு செலுத்துவானிடை (க்காட்சியால்) அறியலாம்.

பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயவாறு காட்டிற்று இது. ௩௪. .

றத்தான் வருவதே யின்பம்;மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

௧௩