பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இல்லற வியல்

இல்லறமாவது இல்லின்கண் இருந்து தானம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் இருபதினும், இல்வாழ்வான் வாழுந் திறம் ஓரதிகாரத்தானும், அதற்குத் துணையான மனைவியிலட்சணம் ஒரதிகாரத்தானும், அதன்பின் இல்லறப்பகுதியான பிரம்மசரியம் காருகத்தம் என்னும் இரண்டினுள்ளும் பிரமசரியத்திற்கு ஆதாரமாகிய மக்கட்பேறு ஓரதிகாரத்தானும் கூறி; காருகத்த இலட்சணம் கூறுவாராகி, நல்கூர்ந்தார் நல்குரவினீங்கியார் செல்வர் வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை ஈறாக நல்கூர்ந்தாரால் செய்யப்படுவன ஏழும், பிறனில்விழையாமை முதலாகத் தீவினையச்சம் ஈறாக இவரால் தவிரப்படுவன ஏழும் பதினாவதி காரத்தாற் கூறி; இவற்றோடுங்கூட ஒப்புரவறிதல் நல்குரவி னீங்கினாரால் செய்யப்படு மென்று கூறி; இவற்றோடுங்கூட ஈகை செல்வரால் செய்யப்படுமாறு கூறி; இவற்றோடுங்கூடப் புகழ் வள்ளியோரால் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும். இல்லறம் முற்படக் கூறியது, துறவறத்தில் நின்றாரையும் ஓம்புதல் இல்வாழ்வான் கண்ண தாதலான்,

௫-வது. - இல் வாழ்க்கை.

இல்வாழ்க்கையாவது, இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன், மேல் அறம்செய்க என்றார், இது முதலாக அறம் செய்யுமாறு கூறுகின்ற ராதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.

ல்வாழ்வான் என்பான், இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை,

௧௬