பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறையுடைமை

இ-ள்:- அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (தன்னை) அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போல, தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை - தம்மை இகழுமவர்களைப் பொறுத்தல் தலைமையாம். [அகழ்தல் - தோண்டுதல்.]

இது, பிறர் மிகையைப் பொறுத்தானென்று இகழாது அவன் பொறுத்ததைத் தலைமையா(ன ஒழுக்கமா)கக் கொள்வார் உலகத்தா ரென்றது. ௧௨௪.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்,

இ-ள்:- மிகுதியான் மிக்கவை செய்தாரை - செல்வமிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவரை, தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தமது பொறையினானே வென்றுவிடுக. . இது, மிகை செய்தாரைப் பொறுத்தல் தோல்வியாகா தென்றும் அதுதானே வெற்றியா மென்றும் கூறிற்று. ௧௨௫.

ன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை,

இ-ள்:- இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - வலியின்மையுள் வலியின் மையாவது விருந்தினரை நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார் பொறை - வலியுடைமையுள் வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.

[ஒரால் என்பது ஆல் விகுதிபெற்ற தொழிற்பெயர்.]

இது, விருந்தினரை விலக்குதல் எளிமையுள் எளிமை யென்றும், அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்தல் வலிமையுள் வலிமை யென்றும் கூறிற்று. ௧௨௬.

றுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து,

௪௭