பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

லமென்று தீயவை செய்யற்க; செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

இ-ள்:- இலம் என்று தீயவை செய்யற்க-ஒருவன் நல்கூர்ந்தேம் என்று நினைத்து (ச்செல்வத்தைக் கருதித்) தீவினையைச் செய்யாதொழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பின்பும் நல்குரவின னாவன்.

[மற்று என்பது அசைநிலை. "இலம்" என்பது தீவினை செய்வாரது கூற்றாகக் கூறப்பட்டது.]

இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறிய னாகுமென்றது. ௨0௫.

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க, நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

இ-ள்:- தன்னை நோய்ப்பால அடல் வேண்டாதான்-தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீப்பால பிறர்கண் செய்யற்க-தீமையாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.

[பகுதி-வகை. தான் என்பது அசை.]

இசு, தீவினை செய்தார்க்கு நோய் உண்டாகு மென்றது. ௨0௬.

தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இ-ள்:- தீயவை தீய பயத்தலால்-தீத்தொழிலானவை (தமக்குத்) தீமையைப் பயத்தலானே, தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தொழில்கள் (தொடிற் சுடுமென்னும்) தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்..

இது, தீய செயல் தீயினும் மிகுந்த துன்பத்தை விளைவிக்கு மென்றது. ௨0௭.

௭௪