பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர்,
தீவினை என்னும் செருக்கு.

இ-ள்:- தீவினை என்னும் செருக்கு-தீவினையாகிய களிப்பை, தீவினையார் அஞ்சார்-(என்றும்) தீத்தொழில் செய்வார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-சீரியார் அஞ்சுவார்.

[செல்வம் முதலியவற்றின் களிப்பால் பெரும்பாலும் தீவினை நிகழ்வதால் "தீவினை யென்னும் செருக்கு" என்றார்.]

இது, தீவினை செய்தற்கு நல்லோர் அஞ்சுவா ரென்றது. ௨0௮.

ருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

இ-ள்:- மருங்கு ஓடி தீவினை செய்யான் எனின்-ஒருவன் மருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-தான் கேடு இல்லாதவன் என்று அறிக.

[மருங்கு ஓடி- அறநெறியை விட்டுப் பக்கத்தில் ஓடி; அதாவது அறநெறியினின்றும் பிறழ்ந்து.]

இது, தீவினை செய்யாதார்க்குக் கேடில்லை என்றது. ௨0௯.

றிவினு ளெல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

இ-ள்:- செறுவார்க்கும் தீய செய்யாது விடல்-தமக்குத் தீமை செய்வார்க்கும் தாம் தீமை செய்யாதொழுகுவதற்கு ஏதுவாகிய அறிவை, அறிவினுள் எல்லாம் தலை என்ப-(எல்லா அறங்களையும் அறியும்) அறிவெல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் (நல்லோர்.)

௭௫