24
24
க. தலைவர்: இல்லை.
செல்வ: கொடிக்குக் காய் பாரமா ?
தலைவர் : இல்லை, இல்லை.
செல்வ: பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?
க . தலைவர் பாரம் மட்டுமல்ல, அதிகமானால் பெரும் பாரம். சுமக்க
முடியாமல் கழுத்தே ஒடிந்துவிடும்.
செல்வ: எப்படி?
க. தலைவர் : மரமும், கொடியும் அறிவற்ற தாவர வர்க்கம். பிறர் உதவியால் வாழ்பவை. பெண் அறிவு படைத்த மனித வர்க்கம். தன்னுழைப்பால் வாழ்பவள். மரத்தையும் மனித வர்க்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் விழிகண் குருடன் அல்லது விபரீதப் போக்கனாக இருக்கவேண்டும்.
செல்வ: (சினந்து) சே! உங்கள் விழாவும் கெட்டது; நாடகமும் கெட்டது,
நீங்களும் கெட்டிங்க! -
(வேகமாகப் போகிறார்)
பரம: (எழுந்து) டாய் முத்தா!
முத்தன்: எசமான்! பரம இதென்னடா வம்பாப் போச்சு வாடா, வா போயி அவரை சமாதானப் படுத்துவோம்.
முத்தன்: வாங்க எசமான் வாங்க பட்டுச் சேலை கட்டின பெண்டாட்டி திருவிழாவுக்குப் போனா, புருஷங்க முக்காலியைத் தூக்கிக் கிட்டுப் பின்னாடியே போகவேண்டியது தானே?
(இருவரும் வேகமாகப் போகின்றனர்)
காட்சி 9
இடம்: தெரு
காலம் : இரவு
(செல்வரங்கம், பரமசிவம், முத்தன் மூவரும் வருகின்றனர்)
செல்வ:பரமசிவம் கல்லூரித் தலைவர் பேசினதைப் பத்திக்கூட நான் கவலைப்படலே அந்தப் பாட்டுக்காரி மகளோட நம்ப இளங்கோ காதல் பண்ணினதும், கைகோத்துகிட்டு ஆட்டம் போட்டதும் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலேங்கிறேன்!
முத்தன்: அப்ப அவலை நெனச்சிகிட்டு ஒரலை இடிச்சிருக்கீங்க எசமான்!
பரம: டாய் முத்தா பெரியவங்க கோபத்திலே இருக்கிறப்போ,அதையும் இதையும் பேசாதேடா!
செல்வ: பரமசிவம் முத்தன் சொல்றது ரொம்ப சரி. அந்தக் கமல வேணி மேலே வந்த கோபத்தைத்தான் கல்லூரித் தலைவன் மேலே விசினேன். இந்தக் காதல் நாடகத்தை என்னோட மகள் சண்பகம் பாத்திருந்தா என்ன நெனச் சிருப்பாள்?
முத்தன்: இந்தப் புருஷன் எனக்கு வேணாம்னு சொல்லி இருப்பாங்க எசமான்.