பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பல்லவர் வரலாறு



அரசனின் மகளான அக்களநிம்மதி என்பவனை மணந்து கொண்டான் என்று பட்டயங்கள் பகர்கின்றன.

இரட்ட அரசர்: கிருஷ்ணன் 1 (கி.பி. 780-794)

தந்திதுர்க்கன் இறந்தபிறகு, அவன் மாமனான கிருஷ்ணன் அரசன் ஆனான். இவன் சாளுக்கியர் மரபை அழித்தான் எலாபுரம் (எல்லோரா) கூற்றத்தில் உள்ள ஒரு மலையில் மிகவும் பாராட்டத்தக்க கயிலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தான். இவன் கி.பி.772இல் இறந்தான்.

துருவன்-கோவிந்தன் போராட்டம்

கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான். இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்; பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான். இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர். துருவன் சிறந்த அரசியல் நிபுணன். அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான். உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்; ஆயின், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.

போர்

உடனே துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு தமையனை வெல்ல முற்பட்டான். கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத்தனக்கு துணையாகக்கொண்டான். நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான். போர் கடுமையாக நடந்தது. துருவனே வெற்றி பெற்றான். அவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.