16
3. சொந்த அரசும் புலிச்
சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!- கிளியே!
அலிகளுக் கின்ப முண்டோ?
4. கண்கள் இரண்டிருந்தும்
காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! — கிளியே!
பேசிப் பயனென்னடீ!
5. யந்திர சாலை யென்பர்
எங்கள் துணிகளென்பர்
மந்திரத் தாலே யெங்கும் — கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ?
6. உப்பென்றும் சீனி என்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! — கிளியே!
செய்வ தறியாரடீ!
7. தேவியர் மானம் என்றும்
தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!—கிளியே!
நம்புத லற்றாரடீ!
8. மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக்!—கிளியே!
பேணி யிருந்தாரடீ!
9. தேவி கோயிலிற் சென்று
தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!— கிளியே!
அஞ்சிக் கிடந்தாரடீ!