பக்கம்:பாலைப்புறா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மூன்று போலீஸ்காரர்களுக்கும் எய்ட்ஸைக் கொடுத்துட்டேன்’ என்று எக்களிக்கிற எஸ்தரை, ஏதோ எதேச்சையாக இல்லாமல் எதேச்சாதி காரத்துக்கு எதிராக ஏவப்பட்ட கணையாக அடையாளம் காண்கிறோம். எஸ்தரின் கொச்சைப் பேச்சும் வாடாபோடாவும்ஆண்-பெண் உறவுகளின் களினத்தை ஏளனப்படுத்துகிற விஷயம் அல்ல. சமூக அவலங்களுக்குச் சவால் விடுகிற மொழியாகத் தான், சமுத்திரம், அந்தப் பாத்திரத்தைக் கையாளுகிறார்.

‘உடம்பை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கெடுக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் சாக வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் சாக வேண்டும் என்று மெழுகுவர்த்தியாய் உருகும் மனோகரும் நம்மை உருக்கும் ஒரு பாத்திரம்.

கலை, எஸ்தர், மனோகர் இவர்கள் சோகச் சித்திரங்கள் என்று சொல்வது கூட வழக்கமானவருணனை, அதைவிட... அதைவிட... ஆமாம், அழுகைதான்வருகிறது.

‘பாலைப்புறாவைத் தொடராக்கி தினமணி, தனது நீண்டகால சமூக சேவைக்கு இன்னுமொரு சான்றினைகிறுவியுள்ளது.

தினமணி மூலம் லட்சக் கணக்கான வாசகர்களுக்கு ஒரு சமூகப் பயணம் தரப்பட்டுள்ளது. சினிமா, இப்படிப்பட்ட புதினங்களைப் பார்க்க வைப்பது நல்லது. சாராயத்திற்கும், சினிமாவுக்கும், சமஅளவிலும் கணிசமாகவும் கிதி ஒதுக்கீடு செய்யும் என் சகோதரத் தமிழனை சினிமாவைத்தவிர வேறெந்தவழியில் சென்றடைவது?

சு.சமுத்திரம் ஒரு வெகுஜன சமுத்திரம். பாலைப்புறா அவரது சமூக விஞ்ஞானசாத்திரம்.

சென்னை,

10.4, 1998 -விஜயதிருவேங்கடம்

ix

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/11&oldid=635542" இலிருந்து மீள்விக்கப்பட்டது