இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோடிமயிற் கூட்டத்திலே
- குஞ்சுமயில் தாயைத்
தேடிகண் டுவப்பதைப்போல்
- தேடி கண்டாய் என்னை !
ஓடிவரும் குற்றாலத்தேன்
- ஒளிப்புனலின் கூத்தில்
ஆடி மகிழ்ந்தினிப் பதைப்போல்
- அணைத்துக்கொண்டேன் உன்னை!
உயர்ந்துயந்து வானுலாவி
- இசைக்கும் வானம்பாடி
முயற்சி இன்றி கூடெய்தல் போல்
- மொய்த்தெனையே என்னை !
நயமிகுந்த கலையுணர்வு
- நல்குசங்கப் பாடல்
பயன் தெரிந்த சுவைஞனைப்போல்
- படித்துணர்ந்தேன் உன்னை !
கண்ணிறைந்த மலர்கள் பல
- கயத்திருந்த போதும்
வெண்டாமரைகொள் கலைமகள் போல்
- விரும்பி கொண்டாய் என்னை !
விண்கதிர்கள் பலவிருக்க
- வேண்டிடாது ஞாயிற்
றொண்கதிர்க்கே மகிழ்மரைபோல்
- உவந்து கொண்டேன் உன்னை!