பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விவாக ரத்து அவசியம் தானா?

“பெண்மையை அறியத் துடிக்கும் இளம் உள்ளத் திற்கு அவள் வருகை பருவ மழை போலிருந்தது.மனைவி என்றால் ஒரு புதுமை.அவளை

த்ருப்தி செய்ய வேண்டும். இதுவே என் ஆவல். மனம் சதா அவள் நினைவிலேயே லயித்துக் கிடந்தது. புதுமலரைச் சுத்தி ஆடும் தேனீ போல.

அவள் வாய் திறந்து ஏதேனும் கேட்டுவிட்டால், அது பிரிய தேவதையின் வாக்காக ஒலித்தது. அப்படிக் கேட்க மாட்டாளா என்பது தானே என் ஆசை. அந்த மோகம் சில மாதங்களில் மறைந்துவிட்டது. அவள் புதுமை என்பது போய் பழகிய ஜந்துவாகி விட்டாளே. அதனால் அவளிடம் குறை காணத் தொடங்கியது மனம், போகப் போக அலுப்படையவும் ஆரம்பித்தது.

அவளது உள்ளம் மாறவில்லை. வெளித் தோற்றம் மாறியது. அது அவள் குற்றம் இல்லை. இந்த உண்மை எனக்குக் கசப்பாகத் தான் இருந்தது. அவளது அழகு மங்கினாலும், அன்பு மறையவில்லை. ஆனால், என் உள்ள நிறைவிலே கள்ளம் புகுந்து விட்டது. அதனால் தான் அவள் குறைகளே பிரமாதமாகப் பட்டன.

மனித மனம் அன்றாடச் சுழல்களில் சிக்கி அலுத்த பின் புதுமைக்காக ஏங்குகிறது. உடன் ஒட்டிய எல்லா வற்றிலும் வெறுப்பு பிறப்பது இயல்பு. பழகப் பழகப் பாலும் புளித்து விடுகிறது.

இது 'பழகிய பால்' எனும் கதை யொன்றிலே வருகிறது. கல்யாணமாகிச் சில வருஷங்கள் கழித்ததும் கணவன் அடையும் மன நிலையைக் கூறுகிறது.