பக்கம்:வைணமும் தமிழும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

169


துறவறத்தை மேற்கொண்டு பிறசமயங்களையெல்லாம் வென்று ‘வாதிகேசரி' என்ற விருதையும் பெற்றார்.

அருளிச்செயல்கள் : பின்னர் முன்புள்ள நான்கு வியாக்கியானங்களையும் ஆழ்ந்து கற்று அவற்றின் சாரமான பொருள் சிறப்பினையெல்லாம் சுருக்கி பன்னீராயிரப்படி யை அருளிச் செய்தார். வேறு நூல்கள் தீபப்பிரகாசிகை, தீப சங்கிரகம், தத்துவநிரூபணம், தத்துவ தீபம், தத்துவ பூஷணம், தந்துவ திப சங்கிரகம்,கீதாசாரம், தமிழ்க்கவிபிரபந்தம், இரகசிய விவரணமாலை, இருபத்து நாலாயிரப்படிப்பிரமானத்திரட்டு, சுலோகருபத்தால் திருவாய்மொழி சங்கதி முதலியன.

(7). பெரியவாச்சான்பிள்ளை : திருக்குடந்தைக் கருகிலுள்ள சேங்கனுரில் யாமுன தேசிகருக்கும், நாச்சியா ரம்மைக்கும் திருமகனாய்த் தோன்றியவர். திருநட்சத்திரம் : ஆவணி-உரோகிணி.வேறு திருநாமங்கள்:ஸ்ரீகிருஷ்ணபாதர், அபயப்ரதாசர்,பூனிமத்கிருஷ்ணர், ஆச்சான்பிள்ளை. திருக்குமாரர். நயனாச்சான் பிள்ளை. சீடர்கள்  : திருக்குமாரர் நயனாச்சான் பிள்ளை, பரகாலதாசர், பின்பழகிய பெருமாள் சீயர், ஸ்ரீரங்க சாரியார், வாதிகேசரி அழகிய மணவாளப்பெருமாள் வாதிகேசரி (அன்போடழகிய மணவாள சீயர்). அருளிச் செயல்கள்; நம்பிள்ளை நியமனப்படி திருவாய்மொழிக்கு “இருபத்துநாலாயிரபடிவியாக்கியானம்’ இது தவிர, மற்றைய மூவாயிரத்துக்கும் வியாக்கியானமும், பரந்தரகஸ்யவிவரணமும், மாணிக்கமாலை, நவரத்தினமாலை, சகலபிரமானதாத்பரியம், உபகாரரத்தினம், கத்யத்திரயத்திற்கு, வியாக்கியானம், ஆளவந்தார் தோத்திரத்திற்கு வியாக்கியானம், அபயப்பிரதான வியாக்கியானம், அநுசந்தானரகசியம், சரமரகசியம், நிகமனப்படி, தனிசுலோகி, முதலிய வேறு நூல்களும் உரைகளும் இவர் தம் படைப்புகள்.