பக்கம்:வைணமும் தமிழும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வைணவமும் தமிழும்



‘கீழேழ் உலகமும் உற்ற அடியினன்’(20)என்பதால் திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த செயல் குறிக்கப் பெற்றதால் வாமனாவதாரமும் நுவலப் பெற்றதாகும். தனி நின்று உலகைக் காப்பவன். இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்பெறும் பெருமையை உடையவன். பிறவாப் பிறப்பு இல்லாதவன்; அவனைப் பிறப்பித்தோரும் இலர்.

மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச்
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் (25-26)

என்பதால் ஊழிக் காலத்தில் பொழியா நின்ற மழை நீரை அன்னச் சேவலாகிச் சிறகாலே வரளச் செய்தவன் என்பது குறிப்பிடப் பெறுகின்றது. .

அளவற்ற கைகளையும் யாக்கைகளையும் உடையவன். ஆகமத்தாலும், அகங்காத்தாலும் மனத்தாலும், உணர்வினாலும் மற்ற எல்லாவற்றாலும் வனப்பும் எல்லையும் அறியப்பெறாதவன். பகைவர் நட்டோர் என்னும் முறை இல்லாதவன், ஆயிரம் தலைகளையுடைய அனந்தாழ்வானைத் தன் வாயிற் கவ்விய கருடனின் தருக்கு அடங்க ஓவெனக் கதறுவதற்குக் காரணமானவன்.

செங்கட் காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (181–182)

என்ற அடிகள் சிவந்த கண்ணையும்,கரிய மேனியையும் உடைய வாசுதேவன், கரிய கண்ணையும் வெள்ளிய திருமேனியையும் உடையசங்கர்ஷணன், சிவந்ததிருமேனியையுடைய பிரத்திம்யுனன், பசிய உடம்பையுடைய அதிருத்தன் என்ற திருமாலினது நான்கு வகை வியூகங்களும் இப் பாடலில் நுவலப் பெறுகின்றன. (3)