பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தோல்வியுற்ற துறவறம்.


பார்த்ததும் அவன் தான் பலவுற வினரைச்
சேர்த்துக் கொண்டு சேர்ந்தனன் மதுரை
வழியெதிர் சென்றேன் வந்தவர் கண்டிட.
வழிமறித் தென்னை வாரி யெடுத்தனர்
தந்தை அழுதனன் ; தக்கன கழறினன் ;
எந்தை சொக்கர் இணையடி தொழுதுபின்
வளநகர்ச் சிறப்பெலாம் மறுதினம் நோக்கி
அளகையம் பதியினை அடைந்தேன் அவருடன்,

 

22