பதிற்றுப்பத்து/ஒன்பதாம் பத்து
Appearance
பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்
பாட்டு - 81
[தொகு]- உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
- வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
- அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
- கடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து
- 5 காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக்
- களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க
- ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
- அரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் திரிந்து
- வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
- 10 மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
- தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
- முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
- கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்
- இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப
- 15 நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி
- அழல்வினை அமைந்த நிழல்விடு கட்டி
- கட்டளை வலிப்பநின் தானை உதவி
- வேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்
- முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து
- 20 சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த்
- தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
- காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
- கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்
- சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
- 25 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
- மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
- தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
- ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்
- கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்
- 30 பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து
- மாண்இழை அரிவை காணிய ஒருநாள்
- பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
- முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
- தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
- 35 தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு
- துஞ்சா வேந்தரும் துஞ்சுக
- விருந்தும் ஆக நின்பெருந் தோட்கே. (81)
- பெயர்: நிழல்விடு கட்டி
- துறை: முல்லை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 82
[தொகு]- பகைபெரு மையின் தெய்வம் செப்ப
- ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
- பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
- செல்சமம் தொலைத்த வினைநவில் யானை
- 5 கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி
- வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல
- மறவர் மறல மாப்படை உறுப்பத்
- தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
- காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
- 10 இன்ன வைகல் பல்நாள் ஆகப்
- பாடிக் காண்கு வந்திசின் பெரும
- பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
- கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
- வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
- 15 புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை
- நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே. (82)
- பெயர்: வினைநவில் யானை
- துறை: முல்லை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 83
[தொகு]- கார்மழை முன்பின் கைபரிந்(து) எழுதரும்
- வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்
- கொல்களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு
- நெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து
- 5 செலவுபெரி(து) இனிதுநின் காணு மோர்க்கே
- இன்னா(தூ) அம்மஅது தானே பல்மா
- நாடுகெட எருக்கி நன்கலம் தரூஉம்நின்
- போர்அருங் கடும்சினம் எதிர்ந்து
- மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. (883)
- பெயர்: பஃறோல் தொழுதி ( = பல் தோல் தொழுதி)
- துறை: தும்பையரவம்
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 84
[தொகு]- எடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்
- போர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்
- கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
- நுதல்அணந்(து) எழுதரும் தொழில்நவில் யானைப்
- 5 பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்
- பூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய
- மன்பதை சவட்டும் கூற்ற முன்ப
- கொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா
- பல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ணாது
- 10 வலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும்
- வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
- கால்முளை மூங்கில் கவர்கிளை போல
- உய்தல்யா வதுநின் உடற்றி யோரே
- வணங்கல் அறியார் உடன்(று)எழுந்(து) உரைஇப்
- 15 போர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல
- நோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து
- முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)
- உரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்
- காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
- 20 குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே
- காலை மாரி பெய்துதொழில் ஆற்றி
- விண்டு முன்னிய புயல்நெடும் காலைக்
- கல்சேர்பு மாமழை தலைஇப்
- பல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே. (84)
- பெயர்: தொழில்நவில்யானை
- துறை: வாகை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 85
[தொகு]- நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
- பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
- ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
- இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
- 5 முன்திணை முதல்வர் போல நின்று
- தீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்
- கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
- சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
- அர(சு)அவை பணிய அறம்புரிந்து வயங்கிய
- 10 மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
- உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
- நனவில் பாடிய நல்லிசைக்
- கபிலன் பெற்ற ஊரினும் பலவே. (85)
- பெயர்: நாடுகாண் நெடுவரை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 86
[தொகு]- உறல்உறு குருதிச் செருக்களம் புலவக்
- கொன்(று)அமர்க் கடந்த வெம்திறல் தடக்கை
- வென்வேல் பொறையன் என்றலின் வெருவர
- வெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்
- 5 நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து)
- இல்லோர் புன்கண் தீர நல்கும்
- நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
- பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்
- கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
- 10 புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த
- பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
- சாந்துவரு வானி நீரினும்
- தீந்தண் சாயலன் மன்ற தானே. (86)
- பெயர்: வெம்திறல் தடக்கை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 87
[தொகு]- சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
- சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
- தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
- ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
- 5 பல்வேல் பொறையன் வல்லனால் அளியே. (87)
- பெயர்: வெண்தலைச் செம்புனல்
- துறை: விறலியாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 88
[தொகு]- வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது
- கடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்து
- தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
- தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்
- 5 துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு)
- அணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
- பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
- நாம மன்னர் துணிய நூறிக்
- கால்வல் புரவி அண்டர் ஓட்டிச்
- 10 சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக்
- குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)
- உருகெழு மரபின் அயிரை பரைஇ
- வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
- கொற்றம் எய்திய பெரியோர் மருக
- 15 வியல்உளை அரிமான் மறம்கெழு குருசில்
- விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
- உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
- ஆர்எயில் அலைத்த கல்கால் கவணை
- நார்அரி நறவின் கொங்கர் கோவே
- 20 உடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில்
- வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந
- நீநீடு வாழிய பெரும நின்வயின்
- துவைத்த தும்பை நனவுற்று வினவும்
- மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய
- 25 புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு
- வருநர் வரையாச் செழும்பல் தாரம்
- கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
- ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
- பாவை அன்ன மகளிர் நாப்பண்
- 30 புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
- தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
- திருவில் குலைஇத் திருமணி புரையும்
- உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
- வேங்கை விரிந்து விசும்(பு)உறு சேட்சிமை
- 35 அருவி அருவரை அன்ன மார்பின்
- சேண்நாறு நல்இசைச் சேயிழை கணவ
- மாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்
- ஞாயிறு போல விளங்குதி பல்நாள்
- ஈங்குக் காண்கு வந்தனென் யானே
- 40 உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி
- நுண்மணல் அடைகரை உடைதரும்
- தண்கடல் படப்பை நாடுகிழ வோயே. (88)
- பெயர்: கல்கால் கவணை
- துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 89
[தொகு]- வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
- தோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்
- புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்
- பழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாது
- 5 பல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப்
- பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்
- பெரும்பல் யாணர்க் கூலம் கெழும
- நன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்
- பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்
- 10 நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்த
- உயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவ
- அரசியல் பிழையாது செருமேம் தோன்றி
- நோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)
- அடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாது
- 15 கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத்
- தகரம் நீவிய துவராக் கூந்தல்
- வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
- வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
- மீனொடு புரையும் கற்பின்
- 20 வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. (89)
- பெயர்: துவராக் கூந்தல்
- துறை: காவல்முல்லை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 90
[தொகு]- மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
- அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
- இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
- துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
- 5 கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா
- ஒளிறுவாள் வயவேந்தர்
- களிறொடு கலம்தந்து
- தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
- அகல்வையத்துப் பகல்ஆற்றி
- 10 மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர
- வாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)
- அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
- விறல்மாந்தரன் விறல்மருக
- ஈரம் உடைமையின் நீரோர் அனையை
- 15 அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை
- கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
- பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
- பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
- உருகெழு மரபின் அயிரை பரவியும்
- 20 கடல்இகுப்ப வேல்இட்டும்
- உடலுநர் மிடல்சாய்த்தும்
- மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்
- பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய
- கொற்றத் திருவின் உரவோர் உம்பல்
- 25 கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே
- மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே
- எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை
- இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
- வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
- 30 விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே
- உரவுக்கடல் அன்ன தாங்(கு)அரும் தானையொடு
- மாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி
- ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
- வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
- 35 மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்
- ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
- காழ்எஃகம் பிடித்(து)எறிந்து
- விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
- காஞ்சி சான்ற வயவர் பெரும
- 40 வீங்குபெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே
- கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
- பழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்
- தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
- வெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்
- 45 கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச்
- செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
- காவிரிப் படப்பை நல்நா(டு) அன்ன
- வளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
- ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
- 50 வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ
- நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
- யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
- ஊழி அனைய ஆக ஊழி
- வெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்
- 55 காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)
- உரும்என முழங்கும் முரசில்
- பெருநல் யானை இறைகிழ வோயே. (90)
- பெயர்: வலிகெழு தடக்கை
- துறை: காட்சிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பதிகம்
[தொகு]- குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
- வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
- வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
- இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
- 5 அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து
- பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
- வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
- வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
- வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
- 10 மந்திர மரபின் தெய்வம் பேணி
- மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
- புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
- அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
- வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
- 15 ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு
- மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
- இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
- பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
- அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி,
- தொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை,
- வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை:
- இவை பாட்டின் பதிகம்.
- பாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின்
- முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் ப
- டைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல
- வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.
- குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.