முக அழகைக் காப்பது எப்படி/முகப் பிரச்சினைகள்

விக்கிமூலம் இலிருந்து
6. முகப் பிரச்சினைகள்

முகத்தை மூடியுள்ளதோலின் செழிப்பும் சிறப்பும் தான், முக அழகாக வெளிப்படுகிறது. இங்கே முகத்தோல் பிரச்சினை என்று கூறலாம். முகப் பிரச்சினை என்று கூறுவதே, அந்த காரணத்தினால்தான்.

முகத்தோலில் தோன்றுவன எல்லாம். சிறுசிறு குழப்பம் தானே தவிர நிலையாக நின்று விடுகிற குறைகள் அல்ல. அவற்றில் இயல்பாகத் தோன்றுகிற குறைகளை மட்டும் இங்கே எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

1. முகப்பரு (Pimples)
2. தோல் படைகள் (Black Heads)
3. கொழுப்புச் சுரப்பிக் கட்டி (ACne)
4. வெப்பக் கடுமையும் கருமையும் (Sun Heat)
5. வியர்வைக்கோளாறு (Sweat Problems)
6. கரும்பொட்டுக்கள் (Black Spots)
7. தேமல் (Freckles)


1. முகப்பரு (Pimples):

மென்மையான, அழகான, கவர்ச்சியான தோலானது. முகத்தில் இயற்கையாய் அமைவது என்பது மிக அதிசயமான சமாசாரம் தான். அதிலும், எல்லா நேரங்களிலும் அவ்வாறு முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்வதும் கஷ்டமான காரியம் தான்.

ஆக, முகத்தின் சருமமானது. எப்படி அமைந்தாலும், நாம் கவலைப் படவேண்டிய அவசியமேயில்லை. அது தேவையுமில்லை. கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் தேவைக் கேற்ப அமைத்துக் கொள்வது தான், மனிதர்களின் மாண்பு மிகு பணியாகும்.

உடம்பு என்றால் வருந்துதல் என்பதுதான் அர்த்தம். வருந்துவதற்கும், வருத்துவதற்கும் தான் உடம்பு வந்திருக்கிறது என்றால். வருகிற பிரச்சினைகளைப் பற்றி அஞ்சுவது பேதமை. ஓடி ஒளிவது கோழைத்தனம். அழுது துடிப்பது அறிவில்லாத மூடத்தனம்.

வாழ்க்கை என்பது ஒரு குத்துச் சண்டை மேடையைப் போல. குத்துச் சண்டை மேடையேறி விட்டு, எதிரே நிற்கும் எதிராளியிடம் கைகுலுக்கி விட்டு. சண்டை போடாமல் இருக்க முடியுமா?

எதிராளியைக் குத்த வேண்டும். எதிராளி குத்துகின்ற தாக்குதலை சமாளிக்க வேண்டும். இதற்கும் மேலே எந்த வழியும் கிடையாது. குத்துக்களை சமாளிப்பதற்காக ஒதுங்கிக் கொள்ளலாம். ஓரடி ஈரடி ஓடிக் கொள்ளலாம். ஓடிப் பதுங்கிக் கொள்ள முடியுமா? தப்பித்து மேடையை விட்டு இறங்கி ஓடிவிட முடியுமா?

அதுபோல் தான் வாழ்க்கைப் பிரச்சினையும். பிரச்சினையை விரட்ட மேற்கொள்ள வேண்டும்.

முகத்திற்குப் பொலிவும், தெளிவும் தருவது, சுத்தமாக இருப்பதும், கறை எதுவும் இல்லாத சரும அமைப்புதான்.

பொதுவாக முக அழகு பாதிக்கப்படுவது வளரும் பருவமாகிய பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள பருவமே.

இந்த வயதிலே, உடலில் வளர்ச்சி மட்டுமல்ல; உடலுக்குள்ளே மலர்ச்சியும். எழுச்சியும் கிளர்ச்சியும் கூடி வருவதுதான்.

சிறுமிகளுக்கு மாதவிடாய் இயக்கி நீராக உள்ள புரோஜெஸ்டிரோன் (Progesterone); சிறுவர்களுக்கு இனக்கீற்றை ஏற்படுத்தும் நடுநாயக ஆண்பால் கூறு என்று கூறப்படுகிற டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) எனும் இந்த இரண்டு இயக்கிகளும். (Harmones) மற்ற சுரப்பிகளை விட அதிகமாக இயங்கி, உடல் மாற்றத்திற்கேற்ப செயல்பட்டு விடுவதால். அந்தப் பருவ உடலும் மலர்ச்சி பெறுவதால்தான். முகத்தில் பாதிப்புகள் நேர்ந்து விடுகின்றன.

இந்த வளர் பருவத்தில். இனி உணர்வுதரும் இயக்கி நீர்கள் அதிகமாக சுரந்து கொள்வதால். அவை விரைந்து சென்று உடலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகளை உசுப்பி விடுகின்றன. அந்தக் கொழுப்புச் சுரப்பிகளும். கொழுப்பு நீர்மத்தை (Sebum) தோலுக்கு அடியில் அதிகமாக சுரந்து விடுகின்றன.

தேவைக்கு அதிகமாக கொழுப்பு நீர்மம். தோலுக்கடியில் உற்பத்தி செய்யப்படுவதால். முகத்தோலில் உள்ள நுண்ணிய ஓட்டைகள் (Pores) அடைப்பட்டுப் போவதால் அங்கே குமிழ் களாக முகப்பருக்கள் தோன்றிவிடுகின்றன.

வளர்வதிலே ஏற்படுகின்ற முக்கியப் பிரச்சினை முகப்பருக்கள்தான். இதைத் தடுக்க முடியுமா? வராமல் நிறுத்த முடியுமா என்றால் முடியும். நிச்சயமாக முடியும். முகப்பரு நிறைய ஏற்படுவதை குறைத்துக் கொள்ளவாவது முடியுமா என்றால். அதுவும் எளிதுதான்.

1. உங்கள் முகத்தில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

2. முகத்தில் தூசி ஒட்டாமல் அழுக்குப் படியாமல் குறைந்தது 2 முறையாவது தண்ணீரில் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

3. முகத்தைக் கழுவுகிற உங்கள் கைகளும் சுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கைகளை அடிக்கடி கழுவி. சுத்தமாய் வைத்திருப்பது. நோய் தடுப்பு முறைகளில் முன்னோடி செயலாக இருக்கிறது.

4. உங்கள் முகத்தின் தோலானது மென்மையானது. தொட்டால் சுருங்கிபோல. மிகவும் உணர்வுடையது (Delicate) மற்ற உறுப்புக்களைப் போர்த்தியிருக்கும் சருமத்தைவிட முகத்தின் சருமம் மிருதுவானது என்பதால் பதமாகச் செய்ய வேண்டும்.

5. உங்கள் முக சருமம் வெளியில் அடிக்கும் வெயில் வெப்பத்தால், விரைவில் காய்ந்து போகும். வீசுகிற காற்றால் மேலும் உலர்ந்து போகும். ஆகையால்தான் இரண்டு முறையாவது முகத்தை நல்ல தண்ணீரால் கழுவிட வேண்டும் என்கிறோம். பல தடவை முகம் அலம்பினால் என்ன என்று கேட்கலாம்.

அப்படிச் செய்தால் முக சருமம் உறுத்தலுக்கு ஆளாகி, மேலும் பல பிரச்சினைகளை பிறப்பித்து விடும்.

6. முகத்தில் முளைத்து வந்துள்ள முகப்பருவை, நீங்கள் கிள்ளிவிடுவதும், பிசைந்து அழுத்திவிடுவதும், அந்த முளையை அகற்றி விடுவதற்கு முயற்சிப்பதும் கூடாது. அப்படிச் செய்தால் பருவின் நீர்ப்பட்டு. பக்கத்து பகுதிகளுக்கும் பரவும். அங்கே கருமை மிகுந்த கருமையான வடுவையும் உண்டாக்கி விடும். முகப் பருவை நகத்தால் கிள்ளுவது மிகமிகத் தவறாகும்.

7. அப்படி ஏதாவது தடவவும், அழுத்தவும் முயற்சித்தால் அழுக்கான கைகளை வைக்காமல் சுத்தப்படுத்தப்பட்ட விரல்களைப் பயன்படுத்தலாம்.

8. கடைகளில் ஏராளமான மருந்துகள். இதற்காக விற்பனையில் விடப்பட்டுள்ளன. நீங்களே போய் வாங்கி முகத்தில் பூசிக் கொள்வது புண்ணுக்கு மருந்து போடப் போய். புண்ணையே மேலும் புண்ணாக்கி விடுகின்ற செயலாக அமைந்துவிடும்.

கடுமையான காரம் நிறைந்த முகப்பருவைக் கழுவும் திரவம் (Lotion) அல்லது (பாலேடுபோல் தோன்றும் மருந்து) பாலேடு மருந்து (Cream) போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் முகப் பரு மறையாமல் போவதுடன் முக சருமம் தடித்தும் கருத்தும் போய்விடுகிறது.

இப்படி தீமை பயக்கும் கழுவுத் திரவத்தையும். பாலேடு மருந்தையும் பயன்படுத்துகிறபோது. முகத்தின் அடியில் முன்னரே அதிக அளவில் ஊறத் தொடங்கிய கொழுப்புச் சுரப்பு. மேலும் அதிகமாக சுரந்து. கட்டிகளைப் பெரிதாக பிறப்பித்து விடும் கொடுமை நேர்ந்து விடும்.

ஆகவே, நல்ல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி உங்கள் முக சருமத்திற்கு எது பொருந்தும் என்பதை அறிந்து கொண்டு வாங்கிப் பயன்படுத்தவும்.

2. தோல்படைகள்: (black Heads)

முகத்தின் தோல் பகுதியில் இரண்டு விதமான தோல் படைகள் இருப்பது உண்டு. ஒன்று கரும்படை (Black heads) மற்றொன்று வெண்படை(White heads)

தோலுக்கு அடியிலே 'சீபம்’ என்கிற கொழுப்புத் தன்மை கொண்ட ஒருவித திரவம் உண்டு. அது அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி தோலின் மேல் பகுதிக்கு வந்து தோலிலுள்ள நுண்ணிய துவாரங்களை விட்டு அதன் வெளிப்புறத்திற்கு வந்து அந்தத் தோல் பகுதியில் சிறிது கட்டியானத் தன்மையுடன் பரவி விடுவதால் அதிலும் அது கருப்பாக, தோற்றம் கொண்டிருப்பதால் அதைக் கரும் படை என்று கூறுகிறார்கள்.

பொதுவாக அது தோலுக்கு அடியிலுள்ள எண்ணெய் சுரப்பிகளினாலேயே ஏற்படுகிறது. அது ஏன் கருமையாகத் தோற்றமளிக்கிறது என்றால் இப்படி சுரப்பிகளால் சுரக்கப்படும் எண்ணெய் பசையின் மேலே வெளிப் புறத்திலுள்ள அழுக்கு, தூசி, மற்றும் சூரிய வெப்பத்தாக்குதல் பட்டு அதன் காரணங்களாலேயே அது கருமை அடைந்து விடுகிறது.

இதைப் போலவே வெள்ளைப் படையும் ஆகும். முகத்தில் ஏற்படுகிற வியர்வைச் சுரப்பியினால். அவை வெளிப்புறத்திலே உற்பத்தியாகி. அங்கே அழுத்தம் கொடுப்பதால் மொத்தமான கட்டியாக மாறிவிடுகிறது. படையானது சீபத்தால் ஏற்படுகிற எண்ணைப் பசை என்றாலும் அதில் மாற்றம் எதுவுமின்றி வெளியே வராததால் அது உள்ளுக்குள்ளேயே அழுக்கினால் மூடப்பட்டு முகத்தின் தோலுக்கு அடியில் ஒரு விதத்தில் வந்து பெரிய கட்டியாக அமைந்து விடுகிறது.

முகத்திலே உள்ள தோலின் நுண் துவாரங்கள் அடைபட்டுப் போவதால்தான் உள்ளேயே பெருகிவருகிற கொழுப்பு திரவம் போன்ற எண்ணெய் பசை அடைத்துக் கொண்டு துவாரத்தின் வழியே வெளியே வர முடியாமல் திடமாக மாறிவிடுகிறது.

இந்த விதமான கட்டிகளை அகற்ற, கிண்ணத்தில் வெந்நீர் வைத்துக் கொண்டு அதன் மேல்புறமாக சுமார் 3 அடி உயரத்தில் இருந்துதலையை மூடி முகத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்தால் அந்த அடைபட்ட நுண்துவாரங்கள் நீக்கப்படுகின்றன. இந்த முறையைத் தவிர, மேலும் ஒரு நல்ல மருத்துவரை அணுகி நல்ல முறையில் தெரிந்து கொண்டு. சிகிச்சை பெறுவது நலம்.

3. கொழுப்பு சுரப்பிக் கட்டி (Acne)

தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பு சுரப்பி சுரக்கின்ற கொழுப்பு திரவமானது. எண்ணைப் பசையுள்ள ஒருவித திரவம். முகத்தின் தோலின் அடிப்பாகத்திலிருந்து மேலோங்கி. பருக்களாக நுண் துவாரத்தில் வந்து வெளியே முகப் பரப்பில் பரவி நிற்கிறது.

அப்படி வருகின்ற எண்ணைப் பசை திரவத்தால் நுண் துவாரங்கள் மூடப்படுகின்றன. அதனால் வெளியே வரமுடியாமல் அந்தத் திரவம் தங்கி நிற்கிறது. அப்படி தேங்கி நிற்கின்ற பகுதியானது படை போல் முதலில் தொடங்கி பிறகு ‘பாக்டீரியா’ போன்ற நுண்கிருமிகளால் பாதிக்கப்படுவதனாலேயே அங்கேயே வீங்கி இப்படி கட்டியாக மாறிவிடுகிறது. இதைத்தான் கொழுப்புச் சுரப்பிக் கட்டி என்கிறோம்.

கொழுப்பு சுரப்பிக்கட்டி என்பது முகத்தோலிலே பாதிப்பை ஏற்படுத்துகின்ற நீரை உருவாக்குவதாகும். கடுமையாக ஏற்படுகின்ற கொழுப்புக் கட்டிகள். கொஞ்சம் கொஞ்சமாக ஓரிடத்தில் தொடங்கி. முகம் முழுவதும் பரவி கழுத்து, தோல் பகுதி, மார்புப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியைப் பாதிக்கின்ற அளவிலே விரிந்து சென்று விடும். இவ் விதமான கொழுப்புக் கட்டிகள் தானாகவே உடைந்து விடுகிறபோது. அதிலிருந்து வெளிப்படுகின்ற எண்ணைப் பசை உள்ள திரவம், மற்றும் பாக்டீரியா நுண் கிருமிகள் சேர்ந்து கொண்டு. தோல் திசுக்களைச் சுற்றிலும் பாதிக்கின்ற அளவுக்கு கடுமையாகி விடுகின்றன. இப்படி வருகின்ற கட்டிகள் முகத்தின் மேலாக வடுக்களாகவே இருந்து விடுகின்றன.

வெள்ளை நிறமுள்ள (தோலில்) பருவ இளைஞர்களுக்கும், பருவப் பெண்களுக்கும் தான் இப்படி முகக் கட்டிகள் வருகின்றன என்பதற்கும் காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் அந்த டீன் ஏஜ் பருவத்திலே ஏற்படுகின்ற உள மாற்றம். மன எழுச்சி. மன அழுத்தம் மற்றும் உடல் வளர்ச்சியின் காரணமாக உணவு முறை. சுகாதாரப் பழக்க வழக்கங்கள். வித்தியாசமாகப் பின்பற்றப்படுவதால் இப்படி முகக் கட்டிகள் ஏற்படுகின்றன.

கடுமையாகப் பாதிக்கின்ற சுரப்பிக் கட்டிகளுக்கு மருத்துவர் மூலம்தான் வைத்தியம் பெற வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் இந்தக் கட்டிகளின் தாகத்தை தடுத்து நிறுத்த உதவும். இனிப்புப் பண்டங்கள். வெண்ணெய். எண்ணெயில் வறுத்த பதார்த்தங்கள் போன்றவைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். முகத்திலே எண்ணைப் பசை அதிகமுள்ள கிரீம்களைத் தவிர்த்தல் நல்லது. பாதிக்கப்பட்ட முகப் பகுதியை மிகவும் நிதானமாக சுத்தப்படுத்த வேண்டும். கட்டிகளுக்கு எரிச்சல் ஏற்படாத வண்ணம் காரியங்களைச் செய்வது நல்லது. இதற்குத் தீர்வாக (Anti-Biotic Tablets) உயிர்க்கொல்லி மாத்திரைகள், மருந்துகள், நுண்கிருமிகளை அழிக்கும் உயிர்க் கொல் லி மாத்திரைகள் இவையெல்லாம் கட்டிகளை உற்பத்தி செய்கிற பாக்டீரியாக்களைத் தடுத்து அதன் விளைவுகளை அடக்க உதவிசெய்யும்.

4. சூரிய கொடுமையும், கடுமையும்: (Sunheat)

சூரிய வெளிச்சம் உடலுக்கு நல்லது. அது விட்டமின் ‘டி’ யாக மாறி உதவுகிறது. விட்டமின்னால் கால்சியம் சத்து வளருகிறது. இளைஞர்களுக்கு வலிமையைச் சேர்த்து உதவுகிறது.

கருப்பாய் இருப்பவர்கள் மற்றும் மான் நிறமாக இருப்பவர்கள் சூரிய வெப்பத்தின் கடுமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் உடலிலே இருக்கின்றன. மெலானின் என்ற சுரப்பி வெம்மையிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆனால் அதிக வெள்ளை நிறத் தோல் உடையவர்கள் தான் சூரியனின் வெப்பத்தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். சூரிய ஒளியின் கடுமையால் சூரிய காயம் ஆகி வலி தரும் தன்மையுடன் பெரிதும் பாதிக்கிறது. அதே சமயத்தில் காய்ச்சலையும் உண்டு பண்ணி கடுமையான நோய்க்கும் ஆளாக்கி விடுகிறது.

சூரிய வெப்பம் அதன் கொடுமையிலிருந்து தப்ப வேண்டுமானால் உடனே தன்னால் முடிந்தவரை நிழலுக்கு வந்து விட வேண்டும். தோல் பகுதியை முடியும் பாதுகாக்க வேண்டும். அதிகமான சூரிய புற ஊதாக் கதிர்களில் நிற்கும் போது தோல் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளைத்தோல் உள்ளவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றார்கள்.

சூரிய வெப்பக் கொடுமையிலிருந்து தப்ப வேண்டுமானால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கீழே மண்தரையும் சுடு தண்ணீரும் மற்றும் இயற்கைப் பொருள்களும் சூரியனின் வெம்மையை அதிகமாகவே பரப்பி விடுகின்றன.

ஆகவே சூரிய வெப்பக் கதிரை நம்மேல் அதிகம் படாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

சிலருக்கு கடுமையான வெப்பம் காரணமாக தோலிலே சுருக்கம் ஏற்பட்டு வயதுக்கு மீறிய தோற்றத்தையும் அளித்துவிடும்.

5. வியர்வை கோளாறுகள் (Sweat Problems)

உடலில் வியர்ப்பது என்பது. உஷ்ணமான உடம்பைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக இயற்கையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஒரு இனிய செயல் முறையாகும். ஒவ்வொருவர் உடம்பிலும். 2½ மில்லியன் வியர்வை சுரப்பிகள் தோலுக்கு அடியிலே ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

உங்கள் அக்குள் (Armpit) பகுதியில் பெரிய பெரிய வியற்வைச் சுரப்பிகள் உருவாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் உடம்பு முழுவதும் வேர்க்கின்ற வேர்வையை விட அக்குள் பகுதியில் அதிகமாக வேர்க்கிறது.

வியர்வையைப்பற்றி ஆச்சர்யமான ஒரு விஷயம். வியர்வைக்கு, நாற்றமோ, துருவாசமோ எந்தவிதமான கெட்ட வாடையோ கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால், வந்த வேர்வையைத் துடைக்காமல் உலரவிடுகிறபோது. அதனுடன் வெளியில் உள்ள நுண்கிருமிகள் சேர்ந்து கொண்டு அந்த தோல்பகுதியில் ஒரு மோசமான, துர்வாசனையைக் கிளப்பிவிடுகிறது. அதைத்தான் நாம், உடல் நாறுகிறது என்கிறோம்.

ஒவ்வொருவர் உடம்பிலும் இதுபோன்ற கெட்டவாசனை வீசத்தான் செய்கிறது. இருந்தாலும் உடல் நாற்றத்துடன் நடமாடுகிற ஒருவருக்குத் தம் உடம்பிலுள்ள கெட்டவாசனை தெரிவதில்லை. அவர்கள் எல்லோருடனும் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ முகம் சுழிக்கிறார்கள். அவரை விட்டு அப்பால் போக எல்லோரும் அவசரப்படுகிறார்கள்.

உங்களுக்கு எப்போதாவது உங்களது உடலில் ஏதாவது துர்வாசனை கிளம்புகிறது என்று உணர்ந்தால், நீங்கள் உடனே. அந்த நாற்றத்தை அகற்றுகிற பவுடர் அல்லது வியர்வையைத் தடுக்கிற பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு நாற்றத்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

நாற்றத்தை அகற்றுவது என்பதற்கும். நாற்றத்தை தடுப்பது என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். வியர்வை ஊறி வெளி வந்துகொண்டுதான் இருக்கும். நீங்கள் அதைத் தடுக்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கவேண்டும்.

வியர்வையை நிறுத்துவது என்பது, வியர்வைச் சுரப்பிகளை வற்றச் செய்து. மேலும் மேலும் வியர்வை சுரக்காமல் செய்வதாகும். இதற்குரிய இரசாயணக் கலவைகளைப் பயன்படுத்தி வியர்வையைக் கட்டுப்படுத்துவதாகும்.

வியர்வையை அகற்றவும், தடுக்கவும் ஆற்றல் உள்ள தெளிப்பான்கள் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. உங்கள் உடலுக்கு ஏற்றாற்போலவும். எரிச்சல் எதுவும் ஏற்படாத வண்ணம் இருப்பதாகவும் பார்த்து வாங்கி நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஒன்று. காயம் பட்டயிடத்தில், அல்லது சிராய்ப்பு ஏற்பட்டயிடங்களில் இந்தப் தெளிப்பான் கலவை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோலவே அக்குளில் “ஷேவிங்” செய்தவுடனேயும், தெளிப்பானை இயக்கிக் கலவையைப் பயன்படுத்தக் கூடாது.