மூவர் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

மூவர் சிறப்பு[தொகு]

மூவர் என்போர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞான சம்பந்தரும், ஆளுடைய அரசாகிய திருநாவுக்கரசரும், ஆளுடைய நம்பியாகிய திருநாவலூர்ச் சுந்தரரும் ஆவர். அவர்களின் சிறப்பினைப்பேசுவது இப்பகுதி.
(வெண்பா)
பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போ லல்லாமை காண். (1)
என்பைப்பெண் ணாக்கி யிரும்பாலை நெய்தலாய்
உம்பர் மகிழ்ந்திடவன் றோதியதும் - தம்பிரான்?
கதவ மடைக்கக் கழறியது மெல்லாம்
பதிகரண மென்றுணரப் பா. (2)


அரவங் கடித்திறந்தா னாருயிரை மீட்டுந்
திருமறைக் காட்டிற்பின் றிறந்தும் - கரமலையை
நீற்றறையை வேகமற நீராகப் பாடியதுங்
கூற்றுதைத்தான் போதமெனக் கொள். (3)


கல்லைப்பொன் னாக்கிக் கடுமுதலை வாய்ப்பிள்ளை
மெல்ல வழைத்து வெறுக்கையினைச் - செல்லுகின்ற
ஆற்றிலிட்டு மீட்டு மருங்குளத்திற் கண்டதுவும்
சாற்றிற் சிவகரணந் தான். (4)



பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு
மூவர் வரலாறு
மூவர்புராண சாரம்
மூவர் தோத்திரம்
நால்வர் சிறப்பு
தேவார மகிமை
"https://ta.wikisource.org/w/index.php?title=மூவர்_சிறப்பு&oldid=29357" இலிருந்து மீள்விக்கப்பட்டது