2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50

விக்கிமூலம் இலிருந்து

சீவக சிந்தாமணி[தொகு]

2. கோவிந்தையார் இலம்பகம்[தொகு]

(காலகம்)[தொகு]

காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்
வேலகம் மிடைந்த தானை வெஞ்சின வெயினர் தாக்க
வால்வளை யலற வாய்விட் டிரலையுந் துடியு மார்ப்பப்
பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார். (26) | ( )

(விற்பழுத்)[தொகு]

விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர்
மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச்
சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக்
கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே. (27) ( )

(வாட்படை)[தொகு]

வாட்படை யனுங்க வேடர் வண்சிலை வளைய வாங்கிக்
கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால்
வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டேர்
பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே. (28) | ( )

(வென்றிநாங்)[தொகு]

வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி
யொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற்
பொன்றவிழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம்
மின்றவிழ் கொடியொ டிட்டு வேற்படை யுடைந்த வன்றே. (29) | ( )

(பல்லினாற்)[தொகு]

பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த
முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாய
ரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்ன
வல்லலுற றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான். (30) | ( )

(வம்புகொண்)[தொகு]

வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்
கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு
மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்
செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ னென்றார். (31) | ( )

(மன்னிரை)[தொகு]

மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட்
பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற்
கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டி
நன்னகர் வீதி தோறு நந்தகோ னைறவித் தானே. (32) | ( )

(வெதிர்ங்குதை)[தொகு]

வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க
வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்
கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு
மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார். (33) | ( )


(கார்விரிமின்)[தொகு]

கார்விரி மின்னன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந்
தேர்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித்
தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற்
கூர்பரி வுற்ற தெல்லா மொருமக னுணர்த்தி னானே. (34) |
(வேறு )


(தன்பான்மனை)[தொகு]

தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு
மின்பா லடிசிற் கிவர்கின்ற கைப்பேடி போலா
நன்பால் பசுவேதுறந் தார்பெண்டிர் பாலர் பார்ப்பா
ரென்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான். (35) | ( )

(போர்ப்பண்)[தொகு]

போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித்
தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழி யாய்ந்து
கார்க்கொண்மு மின்னி னிமிர்ந்தான் கலிமான்கு ளம்பிற்
பார்க்கண் ணெழுந்த துகளாற்பகன் மாய்ந்த தன்றே. (36) | ( )

(இழுதொன்று)[தொகு]

இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற்
பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளை
முழுதொன்று திண்டேர் முகஞ்செய்தவன் றன்னோ டேற்கும்
பொழுதன்று போதுமெனப் புண்மொழிந்தான் மொழிந்தான். (37) | ( )

(மோட்டும்)[தொகு]

மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேற்
காட்டு ணமக்கு வலியாரையுங் காண்டு நாமென்
றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல்
வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. (38) |
(வேறு )


(கடற்படை)[தொகு]

கடற்படை யனுங்க வென்று கானவ ரென்னுங் கூற்றத்
திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத்
தெடுத்தனர் விளியுஞ் சங்கும்வீ ளையும் பறையுங் கோடுங்
கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த வன்றே. (39) | ( )

(கைவிசை)[தொகு]

கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்
செய்கழற் குருசி றிண்டேர் விசையொடு திசைக ளெல்லா
மையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார்
மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே. (40) | ( )

(ஆழியா)[தொகு]

ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாகம்
மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறேர் முழக்கி னானுஞ்
சூழ்துகண் மயக்கத் தானும் புளிஞ ருட்சுருங்கிச் சேக்கைக்
கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார். (41) ( )

(புள்ளொன்றே)[தொகு]

புள்ளொன்றே சொல்லு மென்றிப் புன்றலை வேடன் பொய்தான்
வெள்ளந்தேர் வளைந்த நம்மை வென்றியீங் கரிது வெய்தா
வுள்ளம்போற் போது நாமோ ரெடுப்பெடுத் துய்ய வென்னா
வள்ளன்மே லப்பு மாரி யார்ப்பொடு சிதறி னாரே. (42) | ( )

(மால்வரைத்)[தொகு]

மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக்
காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன்
மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி
கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே. (43) | ( )

(கானவரிரிய)[தொகு]

கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு
மானிரை பெயர்ந்த வாய ரார்த்தன ரணிசெய் திண்டோள்
தானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி
போனின்ற வென்ப மற்றப் பொருவரு சினையி னார்க்கே. (44) |
(வேறு )

(ஐந்நூறு)[தொகு]

ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்
மெய்ந்நூறு நூறு நுதிவெங் கணைதூவி வேடர்
கைந்நூறு வில்லுங் கணையும் மறுத்தான் கணத்தின்
மைந்நூறு வேற்கண் மடவார் மனம்போல மாய்ந்தார். (45) | ( )

(வாள்வாயு)[தொகு]

வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக்
கொள்வாய் மதிய நெடியான் விடுத் தாங்கு மைந்தன்
றோள்வாய் சிலையி னொலியாற் றொறுமீட்டு மீள்வான்
நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான். (46) | ( )

(ஆளற்ற)[தொகு]

ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங்
கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற
வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோல்
நாளுற றுலந்தான் வெகுண்டா னகரார்த்த தன்றே. (47) | ( )
(வேறு)

(இரவிதோய்)[தொகு]

இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கி
யரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்ற
புரவிதேர்க் காளை யன்ன காளையைப் பொலிக வென்றார். (48) | ( )

(இன்னமுத)[தொகு]

இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற்
பொன்னவரி சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்தம்
மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி
யன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார். (49) | ( )

(சில்லரிச்)[தொகு]

சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொ
னல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி
நல்லெழி னெடுங்க ணம்பாப் புருவவில் லுருவக் கோலிச்
செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே. (50) | ( )

பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
2. கோவிந்தையார் இலம்பகம் பாடல் 01-25
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100