பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனோரஞ்சிதம் பாலா

105

 ஆனால், பாட்டைப்போல மற்றவையெல்லாம் அத்தனை சுவையாக இரா. மறுபடியும் ஏதாவது பாட்டுப் பாடும்படி கேட்பார்கள்.

இந்தத் தடவை அத்தை மகனாகப் பாட்டுக்காரன் வருகிறான். அவன் கோட்டைக்குப் போகிறான்: மதுரைக்குப் போகிறான்; அவனிடத்திலே ஒரு பெண் உரிமையோடு தனக்கு வேண்டியவற்றை வாங்கி வரும்படி சொல்லுகிறாளாம்.


கோட்டைக்குப் போறவரே-அத்தை மகனே
கொண்டைச் சிப்பு வாங்கிவாங்கோ--அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
மரதைக்குப் போறவரே-அத்தை மகனே
மல்லிகைப்பூ வாங்கிவாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
பட்டணமே போறவரே-அத்தை மகனே
பட்டுச்சேலை வாங்கி வாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே