262
வைணவமும் தமிழும்
என்ற பாசுரத்தில் தன் பதற்ற நிலையைப் புலப்படுத்துகின்றாள்.
தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தலைவி தாயாரையும் தோழியையும் வேண்டு கின்றாள் பரகால நாயகி (திருமங்கையாழ்வார்).
தவளஇ ளம்பிறை துள்ளும்முந்நீர்த்
தண்மலர்த் தென்றலோடு, அன்றில்ஒன்றி;
துவளஎன் நெஞ்சகம், சோரஈரும்;
சூழ்பனி நான்துயி லாதிருப்பேன்;
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்;
என்நலம் ஐந்துமுன் கொண்டுபோன
குவளை மலர்நிற வண்ணர்மன்னு
குறுங்குடிக் கேஎன்னை உய்த்திடுமின்
- பெரி. திரு.951
[தவள-வெண்ணிறமான முந்நீர்-கடல்]
இப்பாசுரத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் பாசுரங்களிலும் ஆழ்வார்நாயகியின் சித்தோபாய ஊற்றத்தைக் காணலாம்.
2. 'சாத்யோபாயம்' என்பது நம்மால் மேற்கொள்ளப் பெறும் உபாயமாகும். இது பக்தி என்றும், பிரபத்தி என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும்.
(i) பக்திநெறி : பேரன்பின் முதர்ச்சியே பக்தி என்பது, பக்தியை மேற்கொண்டார் பக்தர். பத்தர் எனப்படுவர். பத்தரெனினும் பித்தர் எனினும் ஒன்றேயாகும். உலகில் நோயால் கொள்ளும் பித்தும், மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா