நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்

விக்கிமூலம் இலிருந்து

நன்னூல் விருத்தியுரை[தொகு]

(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)

உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்[தொகு]

நன்னூல் 4. மெய்யீற்றுப்புணரியல்[தொகு]

மெய்யீற்றின் முன் உயிர் புணரும்புணர்ச்சி[தொகு]

நூற்பா: 204


உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே. (01)


நூற்பா: 205


தனி்க்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும். (02)


நூற்பா: 206

மெய்யீற்றின் முன் மெய்[தொகு]

தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம்
துன்னு மென்று துணிநரு முளரே. (03)


நூற்பா: 207


ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
உவ்வுறு மேவ லுறாசில சில்வழி. (04)


நூற்பா: 208


நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. (05)

ணகர னகர வீற்றுச்சொற்களின் புணர்ச்சி[தொகு]

நூற்பா: 209vilakam


ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக்
கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே. (06)


நூற்பா: 210


குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (07)


நூற்பா: 211


சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற
டவ்வா கலுமா மல்வழி யும்மே. (08)


நூற்பா: 212


னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே. (09)


நூற்பா: 213


மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே. (10)


நூற்பா: 214


தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. (11)


நூற்பா: 215


மரமல் லெகின்மொழி யியல்பு மகரம்
மருவ வலிமெலி மிகலு மாகும். (12)


நூற்பா: 216


குயினூண் வேற்றுமைக் கண்ணு மியல்பே. (13)


நூற்பா: 217


மின்பின் பன்கன் றொழிற்பெய ரனைய
கன்னவ் வேற்று மென்மையோ டுறழும். (14)


நூற்பா: 218


தன்னென் னென்பவற் றீற்றுனவ் வன்மையோ
டுறழு நின்னீ றியல்பா முறவே. (15)

மகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி[தொகு]

நூற்பா: 219


மவ்வீ றொற்றொழிந்துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும். (16)


நூற்பா: 220


வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அவ்வழி யுயிரிடை வரினியல் பும்முள. (17)


நூற்பா: 221


நுந்தம்
எம்நம் மீறா மவ்வரு ஞநவே. (18)


நூற்பா: 222


அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும். (19)


நூற்பா: 223


ஈமுங்
கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. (20)

யரழவீற்றுச்சொற்களின் புணர்ச்சி[தொகு]

நூற்பா: 224


யரழ முன்னர்க் கசதப வல்வழி
இயல்பு மிகலு மாகும் வேற்றுமை
மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். (21)


நூற்பா: 225


தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழுங் கோல்வந் துறுமே லற்றே. (22)


நூற்பா: 226


கீழின்முன் வன்மை விகற்பமு மாகும். (23)

லகர ளகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி[தொகு]

நூற்பா: 227


லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பும்
ஆகு மிருவழி யானுமென்ப. (24)


நூற்பா: 228


குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம்
ஆகவும் பெறூஉ மல்வழி யானே. (25)


நூற்பா: 229


குறில்செறி யாலள வல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபு மாவன வுளபிற. (26)


நூற்பா: 230


லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா
வலிவரி னல்வழி யியல்புமா வனவுள. (27)


நூற்பா: 231


வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். (28)


நூற்பா: 232


நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும். (29)


நூற்பா: 233


இல்லெ னின்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமு மாகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும். (30)


நூற்பா: 234


புள்ளும் வள்ளுந் தொழிற்பெயர் மானும். (31)

வகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி[தொகு]

நூற்பா: 235


சுட்டு வகரமூ வினமுற முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும். (32)




நூற்பா: 236


தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். (33)


வருமொழித் தகர நகரத் திரிபு[தொகு]

நூற்பா: 237


னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்க ளாயுங் காலே. (34)


உருபு புணர்ச்சி[தொகு]

நூற்பா: 238


உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும். (35)


புறனடை[தொகு]

நூற்பா: 239


இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற்
கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே. (36)



நான்காவது மெய்யீற்றுப்புணரியல் முற்றிற்று[தொகு]

பார்க்க
நன்னூல்
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
நன்னூல் சொல்லதிகாரம்
[[]] :[[]]