இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
63
உலகின்கணுள்ள தோற்ற பேதங்களெல்லாம் ஒன்றின் ஒன்றாகக் காலந்தோறும் பரிணமித் தமையுமென வாதிப்பார் பரிணாம வாதிகள். இந்தப் பரிணாமவாதமே இக்காலத்திலே மேலைத் தேசங்களிலே (Evolution Theory) இயற்கைத் திரிபு என்னும் பெயர் கொண்டு பெரிது பாராட்டப்படுவது.
நூல் | : | பிரபஞ்ச விசாரம் (1919) 4- பரிணாம வாதம், பக்கம் - 31 |
நூலாசிரியர் | : | யாழ்ப்பாணம் - குகதாசர் - ச. சபாரத்தின முதலியார் |
விபூதி | — | வெண்பொடி |
அகததுவசம் | — | மாடக் கொடிகள் |
திவசம் | — | நாள் |
குரோசம் | — | கூப்பிடுதூரம் |
சங்கிலி | — | தொடர் |
நூல் | : | திருக்கருவைத் தலபுராணம் (1919) |
ஆசிரியர் | : | எட்டிசேரி ச. திருமலைவேற் பிள்ளை |
உப்ரிகை | — | மேல்வீடு |
விமானம் | — | ஏழடுக்கு வீடு |
இரமியம் | — | மகிழ்வைக் கொடுப்பது |
சாரம் | — | பொருள், உள்ளீடு |
நூல் | : | மேகதூதக் காரிகை (1919) |
நூலாசிரியர் | : | காளிதாச மகாகவி மொழிபெயர்த்தி யற்றியவர் : சுன்னாகவும் அ. குமாரசுவாமிப் பிள்ளை |
- கலராவின் காரணப் பெயர்கள் :
- விஷபேதி, பெரு வாரி, கொள்ளை நோய், கசப்பு
வாந்திபேதி யென்பது அதனால் பீடிக்கப்படுகிற மனிதர் எடுக்கிற வாந்தி அவர்களுக்கு ஆகிற பேதி ஆகிய இவ்விரு காரியங்களையும் ஒருமிக்க உணர்த்த வரும் ஒருவகை வியாதிக்கு வழங்கும் பெயராகும். வாந்தி பேதி